யாருக்கு வேணும் ஈழம்?!!!















மிஞ்சி மிஞ்சி போனால் எத்தனை வருடங்கள் உயிரோடிருக்க முடியும்...
போங்கடா நீங்களும் உங்கடை ஈழமும்...!

ஒன்று மட்டும் சொல்லுவேன் "we are srilankans" இப்படி சொல்கிறவனின் பரம்பரையே தற்கொலை செய்யுமளவுக்கு கேள்விகளும் பதிலும் இருக்கிறது என்னிடம்.

கலைஞர் காட்டிய படம்...

இலங்கையில் போர்நிறுத்தக்கோரி தமிழக முதல்வர் கால வரையறையற்ற உண்ணாநிலைப்போராட்டம்
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 03:55.33 AM GMT +05:30 ]











\\
உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி அறிவிப்பு
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 07:50.48 AM GMT +05:30 ] [ பி.பி.சி ]


\\
கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாமென படையினருக்கு அரசு உத்தரவிட்ட சில மணி நேரத்தில் விமானங்கள் குண்டு தாக்குதல்: விடுதலைப்புலிகள்
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 09:29.22 AM GMT +05:30 ]



\\
ஒழுங்காக திட்டமிடப்பட்ட அதிகாரவர்க்கத்தின் நாடகம்...

களமுனைகள் அறியாத கனரக ஆயுதங்கள் பற்றிய அறிவிப்பு...

அதிகார வர்க்கம் ஆடுகிற நாடகங்களும் அழிந்து போகிற சனங்களும்...

\\

படங்களும் செய்திகளும் தமிழ்வின் இணையத்தளம்.

ஈழம்-சொல்ல விரும்பாதவை...!

























____________________________________________________________________________


\\
பாதுகாப்பு வலயம்' மீது படையினர் அகோர தாக்குதல்: இன்று (ஞாயிறு) 294 பொதுமக்கள் பலி; 432 பேர் படுகாயம்.

\\
வன்னியில் படையினர் எறிகணை, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்: இன்றும்(சனி) 32 பொதுமக்கள் படுகொலை; 75 போ் காயம்

\\
வன்னியில் 69 சதவீத சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்: பிராந்திய சுகாதார பிரிவு அலுவலகம்
[ சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009, 03:20.42 PM GMT +05:30

\\
வன்னி மக்களது உண்மை நிலையை கண்டறிய சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்: நடேசன்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009, 04:55.55 AM GMT +05:30 ]


\\
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பிச் சென்றுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வேலுப்பிள்ளை பிரபாகரன் சுதந்திரப் போராட்டத்தை தலைமையேற்று மேற்கொண்டு வருவதாகவும், வன்னி மக்கள் மத்தியில் பிரபாகரன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


\\
வேறொன்றும் சொல்லமுடியாமல் என்றல்ல இன்றய சூழ்நிலையில் நான் சொல்ல விரும்பவில்லை நான் சொல்வதற்கான நாட்கள் இதுவல்ல.


\\

ஈழத்தில் வாழ்வதற்கு மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்...


மேலே எழுதப்பட்ட தலைப்பைத்தான் பதிவுக்கு வைக்கலாம் என்றிருந்தேன். வீணான பரபரப்பு தேடுவதற்கு நானொன்றும் ஊடகத்துறையில் இல்லையே! விருப்பப்பட்டால், எதையயேனும் எழுதலாம் என்று தோன்றினால் எழுதுபவன் அன்றி எழுதவேண்டும் என்று எழுதுபவன் அல்லவே.


படங்களும் செய்திகளும் தமிழ்வின் இணையத்தளம் tamilwin

விஜய் போட்ட சத்தமும் பதிவர்கள் பட்ட பாடும்..!

உண்மைதான் ஊருக்கு தெரிந்தவன் என்ன செய்தாலும் பெரிய கதைகள்தான் போல.நடிகர் விஜய் யாரையோ பார்த்து சத்தம் போட்டாராம் அது பற்றிக் கொண்டுவிட்டது இவர்களின் இருக்கைகள் எங்கும். விஜய் கோபப்பட்டதையே அக்கறையோடு பேசுகிற தமிழர்களின் மெல்லிய மனதை யாரும் கண்டு கொள்ள மறுக்கிறார்கள். உலகம் முழுதும் கத்திக் கொண்டிருக்கிற தமிழர்களை கவனிக்கவும் அவர்கள் பிரச்சனையை அலசவும்தான் ஆளில்லாமல் போய்விட்டார்கள்.எப்படி இவ்வளவு அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது உலக நாடுகளுக்கு.

இதில் பதிவுகள் சூடாகியது விஜய் சூடாகியதை விட பெரிய பரபரப்பு (இந்த சூடான இடுகைகள் பற்றிய விசயம் பலரும் ஆராய்ந்தது அது பற்றி வேறொரு முறை பார்க்கலாம்) முன்னெப்பொழுதோ யாருக்கோ சொன்னது போல தமிழர்கள் எப்பொழுதும் அடுத்த பரபரப்புக்கு அலைகிற மனோநிலையில் இருப்பவர்கள்தான். வாயில் மெல்லுவதற்க்கு அடுத்த வீட்டு விசயம் என்ன இருக்கும் என்று அலைபவர்கள்தானே. கொஞ்ச நாள் சிவாஜி, கொஞ்ச நாள் கமல்-கொளதமி, கொஞ்சநாள் முத்துக்குமார் கொஞ்சநாள் ஒஸ்காரும் ரஹ்மானும் என்று மாறிக்கொண்டே இருக்கிறது அவர்களது பரபரப்புகள்.இந்த பரபரப்புகள் பற்றி சமீபத்தில் தமிழ் மண நட்சத்திரமாய் இருந்த அண்ணாச்சி சாத்தான் குளத்தான் நச்சென்று ஒரு குறிப்பு சொல்லியிருப்பார். மேற்குலகம் சரியாக கணித்ததும் பயன் படுத்துவதும் இந்த பலவீனத்தைதான், பொங்கிக் கொண்டிருந்தவர்களை ரஹ்மானை கௌரவித்து திசைதிருப்ப முயன்றார்கள்.


மின்னஞ்சலிலிருந்து பதிவுகள் பத்திரிகைகள் வரைக்கும் விழுந்தடித்து எழுதியிருந்தார்கள். என்ன பிரச்சனைனயோ அவருக்கு ஏதோ கோபப்பட்டு கத்தியிருக்கிறார் இதுக்கு இவர்கள் எல்லோரும் அவதிப்படுகிறார்கள் இதைப்பார்த்து நான் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்கு வேலையில்லாமல் இதை பதிவெழுதிக் கொண்டிருக்கிறேன்.

_____________________________________________________

\\
இந்தப் பதிவுக்கும் விஜய் என்று நான் தலைப்பு வைத்திருக்கிறேன் ஆனால் இது சூடாகப்போவதில்லை என்பது நிச்சயம்.

\\
விஜய்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

\\
அதே போல பதிவர்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

கற்பிக்கப்பட்ட பாடம் - இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலை முன்வைத்து!!!

என்னுடைய ஆதங்கம் எல்லாம் இலங்கையின் படித்தவர்களும், பல்கலைக்கழங்களும், இளைய சமுதாயமும் எந்த பொறுப்புணர்வும் இல்லாமலும் நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ளாமலும் இருப்பதுதான் மற்றவர்களுக்கு தான் இப்படி என்றால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூடவா சிந்திக்கிற ஆற்றல் இல்லாமல் போயிற்று?!

நாட்டில் நடைபெறுவது என்ன நாம் எதை நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது பற்றிய பிரக்ஞையே இல்லாமலா இருக்கிறார்கள்?!

எப்பொழுது நிகழப்போகிறது இலங்கையில் ஒரு சிந்தனை மாற்றம்.?!


அந்தவகையில் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் அந்த பொறுப்பிருப்பதாக எனக்கு படுகிறது அவர்களும் இலங்கையின் பெருமைக்குரிய பிரஜைகள்தானே?!

இனி...

லோஷனுக்கு ஒரு பின்னூட்டம் எழுதப்போய் அது கொஞ்சம் பெரிதாகிப்போனதில் பதிவாக்கியிருக்கிறேன்.

இது கட்டாயம் இலங்கைக்கு ஒரு பாடமாகவே இருக்கும். இலங்கையில் இத்தனை பிரச்சனைகளும் கெடுபிடிகளும் இருக்கையில் உயிர்கள் கிரிக்கெட் ஸ்கோர் போல எண்ணப்பட்டுக்கொண்டிருக்கையில் இலங்கையில் விளையாடுவதற்கு சம்மதித்த இலங்கை அணிக்கும், எந்த வித மனிதநேயமும் இல்லாமல் புலிகள் மீதிருக்கிற நம்பிக்கையில் இலங்கைக்கு வந்து விளையாடிப்போன இந்திய அணிக்கும் (உண்மையில் பாகிஸ்தானுக்கு போகாமைக்கு மும்பை தாக்குதலுக்கான எதிர்ப்பின் வெளிப்பாடு மட்டுமல்ல உள்ளுர இருந்த பயமும்தான் காரணம்) பாகிஸ்தானின் இந்தத்தாக்குதல் பல கேள்விகளை எழுப்பியிருக்கும் அல்லது அவர்களுடைய இறையாண்மையிலும் மனச்சாட்சியிலும் சலனத்தை உண்டுபண்யிருக்கும்.


அதே நேரம் இலங்கை அணி இந்தியாவில் போய் விளையாடி இருக்கலாம். அதை செய்யாமல் மெத்தனத்தில் நாட்டில் என்ன நடந்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை நாங்கள் சாப்பிடுகிறோம், குளிக்கிறோம் என்பது போல இதனையும் செய்து அத்தனை போட்டிகளிலும் மண்ணைக்கவ்விக் கொண்ட போதே புரிந்து கொள்ள வேண்டாமா இது காலத்தின் கட்டாயம் என்பதை!

இந்தியா புலிகளின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இலங்கை பாகிஸ்தான் மீது வைத்தது இலங்கையின் முட்டான்தனமே ஒழிய பாகிஸ்தானுடைய குற்றமல்ல, அவர்கள் தாக்குவதென்று முடிவெடுத்துவிட்டால் இலங்கை கிரிக்கெட் அணி என்ன, எந்த நாட்டு ஜனாதிபதி வந்தால் என்ன, மறு கருத்தே கிடையாது அடிதான்!! பின்விளைவுகளை பற்றி அவர்கள் யோசிப்பதே இல்லை ஏனெனில் அவர்களுக்கு தெரியும் அதனை எப்படி கையாளுவதென்பது அதற்கான பக்க வலு அவர்களிடம் இருக்கவே இருக்கிறது ஆனால் புலிகளுக்கும் தமிழர்களுக்கும் யாரிருக்கிறார்கள் உலகம் கண்டு கொள்ள விரும்பாத அடிமைகள்தானே அவர்கள்...

இதனை நான் கூறுவதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது இலங்கையின் உலகம் கவனிக்ககூடிய விசயங்களுள் இலங்கை கிரிக்கட் அணி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று ஆகவே அவர்கள் ஆகக்குறைந்த மனித நேயத்தோடு அவர்களுடைய தொழிலை செய்திருக்கலாம் என்பதே! இலங்கையில் இவ்வளவு உயிர்கள் மடிந்து கொண்டிருக்கிறது நாளாந்தம் அரசியல் சட்ட யுத்த கெடுபிடிகள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது எனவே நாங்கள் இந்த போட்டிகளை ரத்து செய்யலாம் என்று ஒரு அறிக்கை தானும் விட்டிருந்தால் அது உலக ஊடகங்களில் ஒரு சிறு சலனத்தையேனும் ஏற்படுத்தி இருக்கும் அல்லது இந்த காரணங்களை கூறி இந்தியாவில் விளையாடலாம் என்றாவது முடிவெடுத்திருக்கலாம். ஏனெனில் ஒருவன் தன்னை கொழுத்திக்கொண்டு சாவதை விட உலகம் பெரிய நட்சத்திரங்கள் சொல்வதையும் பணம் நிரம்பிய சமூகபெரிய மனித அந்தஸ்து உள்ளவர்கள் சொல்வதையும்தானே கவனிக்கிறது அதற்காகக்தான் சொன்னேன்!

செத்துப்போன முத்துக்குமாரிலிருந்து பலரும் சொன்ன "என் தமிழ் இனம் அழிகிறது அதனை காப்பாற்றுங்கள்" என்பதை விட "எல்லாப்புகழும் இறைவனுக்கே" என்பது தானே பேசப்படுகிறது, உலகம் கொண்டாடுகிறது ஒவ்வொரு கேனையனும் ஊடகங்களும் சொல்லி சிலாகிக்கின்றன. இன்னொன்று ரஹ்மான் அதே மேடையில் இந்தியும் பேசியிருந்தார்.

ஆக இலங்கை கிரிக்கெட் அணிக்கு இந்த தாக்குதல் தீவிர வாதம் என்பது என்ன விடுதலைப்போராட்டம் என்பது என்ன, என்பது தெரிய ஒரு வாய்ப்பாகவும் அது இந்தியா உட்பட உலகத்துக்கும் தெரிய ஒரு வாய்பாகவும் அமைந்த பாடம் என்பது என் கருத்து .

மற்றப்படடி தாக்குதலில் உயிர்நீத்த காவல் துறையினருக்கு அஞ்சலிகளையும், காயப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு அக்கறையான விசாரிப்புகளையும், இந்த சம்பவத்துக்காக பாகிஸ்தானுக்கு வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய பதிவர்களும் புழுகுகளும் சலிப்புகளும்!!

வலைப்பூக்கள் இவ்வளவு இலகுவானதாய் இருப்பதில் இருக்கிற அசௌகரியம் திரட்டிகளில் தெளிவாக தெரிகிறது. இணையச்செய்திகளை எடுத்துக்கொண்டு புழுகிறவர்கள் அதிகமாகிப்போனார்கள், தமிழ்மணத்தில் ஒரு பதிவு 10 நிமிடங்கள் முகப்பிலிருப்பதே பெரிய விசயமாகிவிட்டது! நல்ல எழுத்துகளை வாசிக்க முடியவில்லை நான் ஒரு வாசகன் மட்டுமே என்பதை இந்த நேரத்தில் சொல்ல விரும்பகிறேன்.

புதிய பதிவர்கள் நிறைய வருகிறார்கள் என்பது ஆரோக்கிமான விசயம். ஆனால் இணையத்தள செய்திகளை வெட்டி ஒட்டுவதிலும்; சில நகைச்சுவைகளை,அனுபவங்களை பகிர்வது ஆரோக்கியமானது என நான் நினைக்கிறேன். விருப்பட்டால் நடிகைகள் விளையாட்டு வீரர்கள் என படங்கைளப்போட்டே தாங்களும் எழுதுகிறவர்கள் என பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.


உதாரணமாய் இன்றய தற்பொழுது தமிழ் மணத்தில் முகப்பிலிருக்கிற பிரதான இடுகைகளில் எத்தனை பதிவுகள் உருப்படியானவை என்று பார்ததால்...தமிழ் மணம் குப்பைகளை திரட்டுவது தெளிவு தமிழ்மணத்துக்கு வந்த சோதனை!


____________________________________________


கொழும்பின் விமானத்தாக்குதல் வெட்டி ஒட்டுகிறவர்களுக்கும் 'திடீர்' பதிவர்களுக்கும் அவரவர் வலையில் குப்பைகளை போடுவதற்கு கிடைத்திருக்கிற இன்னொரு செய்தி இவர்கள் திருந்துவதற்கு இடமே இல்லை!இவர்கள் தங்கள் வலையில் குப்பைகளை சேர்ப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை திரட்டிகளை நெருக்கடிக்கள்ளாக்கி நல்ல பதிவுகளை ஓரங்கட்டிவிடுகிற வீணான பரபரப்புகள்தான் வெறுப்பை தருகிறது.

எனக்கு இப்பொழுதிருக்கிற கோபம் சங்கடங்கள் மற்றும் சந்தியில் நின்று கதைப்பவர்கள் போன்றவர்களால் உருவாகுகிற வீணான பரபரப்புகள் மீதுதான்.எனக்கென்றால் விளங்கவில்லை திடீரென்று எங்கிருந்து எழுத வந்தார்கள் இவர்களென்பது,பிரச்சனையின் தார்ப்பரியம் தெரியாமல் உணர்ச்சிவசப்படுகிற விசயம் அல்லல இது.


பெரிய காமெடிகள் என்னவென்றால் இவர்களெல்லாம் ஊரில் பத்திரிகைகளுக்கு எழுதியவர்களாம், ஆக்கங்கள் எழுதி அனுப்பியவர்களாம், என்ன நேயர் விருப்பம் எழுதின ஆக்கள் எல்லாம் அரசியல் பேச வந்தால் இப்படித்தான் இருக்கும்,குடும்பச்சண்டைக்கே நேரம் போதவில்லை இவர்களுக்கு!!


நாட்டில் சமாதானம் தேவை என்பதும் யுத்தநிறுத்தம் அவசியம் என்றும் கதறுபவர்களாய் இவர்கள் இருக்கையில் இப்படியான அதே புரிதல்கள் இல்லாத சிங்களவர்கள் போல் புழுகுவது சகிக்க முடியாத ஒன்று .


சிங்களவர்கள் யுத்தத்தின் விளைவகளை நேரடியாக அனுபவிக்கவில்லை என்பதும் இந்த யுத்தத்தின் நீடிப்புக்கான இன்னொரு வலுவான காரணம் என்பதுதான் என் எண்ணம்.இரண்டு பக்கமும் யுத்தத்தை வலிகளோடு உணர்ந்திருப்பின் தலைமுறைகள் கடந்தும் இது நீடித்திரக்காது என்பது உண்மையாய் இருக்கலாம்.


நல்ல வாசிப்பகளுக்கும் புரிதல்களுக்கும் வழி வகுக்கக்கூடிய ஊடகமாய் வலையுலகம் இருப்பது உண்மை. அதற்கு திரட்டிகள் தருகிற பங்கும் அவசியமானதாகிற்று! அவை இப்படியான குழப்பங்களால் வீணாக்கப்பட்டுக்கொண்டிருப்பது தொடர் வாசகனாகிய என்னைப்போனறவர்களுக்கு சலிப்பை உண்டாக்குவதும் உண்மை.

__________________________________________________


நீங்கள் எழுதுவதை நாலுபேர் வாசிக்கிறார்கள் என்றால் குறைந்த பட்சமான புரிதலாவது உங்களுக்கு இருக்க வேண்டும் அல்லது நீங்கள் எழுதுகிற விசயத்தில் உங்களுக்கு ஒரு திருப்தி இருக்க வேண்டும் இல்லையேல் எழுதாமல் இருக்கலாம்! நாளுக்கு மூன்று பதிவு போட்டே அகவேண்டும் என்றிருப்பதை விட நான்கைந்து பதிவுகளை கூடுதலாய் வாசிப்பது நலம். அல்லது இருக்கவே இருக்கிறது பின்னூட்டங்கள் விரும்பிய அளவுக்கு எழுதலாம் இதன் மூலம் நன்றாக எழுதுவபர்களை ஊக்குவிக்கவும் முடியும்.

திருந்துங்கப்பா!!

____________________________________________________

எனக்கு எழுத வராது என்று தெரியும் அதனால் எழுதுவதில் அதிகம் நேரம் செலவழிப்பதில்லை.

சாத்தான்கள் எழுதிய தீர்ப்பு...!

திறக்கப்படாத ஜன்னலுக்கு வெளியே..
வீசிக்கொண்டிருந்த காற்றில் எழுதப்பட்டிருந்தன
சிறுபான்மையினருக்கான சாசனங்கள்...
இவை எந்த தேவதூதனால் முன்மொழியப்படும் என்பது
அடிமைகளாய் இருக்கிற என் சந்ததிகளுக்கு தெரிந்திருக்கவில்லை
எதிர்பார்க்காத நேரமொன்றில் அனுமதியின்றி நுழைந்த
தேவதூதன் வேடமிட்ட சாத்தான்கள் வாசித்துப்போயின
புதிய தலைமுறை அடிமைகளுக்கான சாசனங்களை
பயங்கரவாதம் முடிந்து போக,
அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தன...
அடிமைகளுக்கான வேலைவாய்ப்புகளுக்கு!

முத்துக்குமாரின் கடைசி வார்த்தைகள்...

யாரென்றே அறியாத இந்த முத்துக்குமாரின் உணர்வுகள் கேள்வியுற்ற நேரத்திலிருந்து சுட்டுக்கொண்டிருக்கிறது!

அவரைப்பறி சொல்ல என்னிடம் ஏதும் இல்லை என்றாலும் உணர்வுகள் ஒரு போதும் சாகக்கூடாது முத்துக்குமார், நீ ஏன்?! நீயே ஒரு தலைவன்தானே! நின்று களமாடி இருக்கலாமே...



இலங்கையின் இளைய தலைமுறைக்கும் பல்கலைக்கழக மாணவ குஞ்சுகளுக்கும் சுய அறிவே இல்லாத சிங்கள மாணவர் சமுதாயத்துக்கும் முத்துக்குமாரின் உணர்வுகள்.




விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?
கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)
இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.
1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.
3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.
6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.
7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.
8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்
9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.
10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99
அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

சொல்ல விரும்பாதவை: 28-01-2009

இரண்டு நாள் பயணமாக மகிந்தவின் அழைப்பபை ஏற்று இலங்கை வந்த பிரணாப்; இரவுல வந்து இரவுலயே போட்டாராம் (உல்லுக்கா பட்டே).என்ன இழவுக்கு வந்தவரோ சில வேளை மச்சான உனக்கொரு விருந்திருக்கு வந்துட்டுப்போ எண்டு மஹிந்தவும் காவி உடுத்தின பேய்களும் சொல்லிச்சினையோ தெரியாது.

கொல்லுங்கோ ஆனா எங்களுக்கு பிரச்சனை வராத அளவக்கு கொல்லுங்கோ எண்டுறமாதிரிதான் இருக்குது உந்தக்கதை யுத்தத்தை நிப்பாட்டுங்கொ எண்டால் கொல்லுறதை குறையுங்கோ எண்ட ஆலோசனை வழங்கல், தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளின் மாமன் மச்சான சந்திப்பு மாதிரி நடந்திருக்கு மஹிந்தவும் முகர்ஜியும் சந்திச்சது.


எனக்கென்ன கவலை எண்டால் வந்தவர் கிரிக்கெட் மச்சைக்கூட பாக்காமல் போயிட்டாரே
(சே வடை போச்சே) அதான்!

இப்படியானதொரு அரசு இருப்பதனால்தான் இந்தியாவில் குண்டு வெடிக்கிறது!!!


//

பாகிஸ்தானுக்கு போக மறுத்த இந்திய கிரிக்கெட்டீம் இலங்கைக்கு விளையாட வந்த நியாயம் என்ன?! அவர்களது உணர்வுகள் எனனாயிற்று மும்பை குண்டுவெடிப்புகளுக்காகவும் தாக்குதல்களுக்காகவும் மட்டும் பாகிஸ்தான் பயணத்தை புறக்கணித்தார்கள் என்றால்;(மனதுக்குள்ள பயமும் இருக்கும் நிறைய வாயைக்குடுத்திட்டம் போனா ஆராருக்கு உயிர் போகுதோ தெரியாதெண்டுறதும் இருந்திருக்கும்) இத்தனை அவலங்களுக்கிடையிலும் விளையாடுவதற்கு இலங்கைக்கு எப்படி வர முடிந்தது.

இருந்தாலும் என்ன மனிதர்கள் இவர்கள் நாடு இருக்கிற பரபரப்புக்குள்ள, ஒரு பக்கத்துல சனம் செத்து விழுந்து கொண்டிருக்கு இன்னொரு பக்கத்துல விளையாடுகிறார்கள் யாரோ சொன்னது போல தமிழனின் அவலம் உலகத்தாருக்கு கிரிக்கெட் ஸ்கோர் கேக்குறமாதிரிதான் இருக்கு!!!

என்ன கேவலமான உலகமிது என்ன மக்கள் இவர்கள் உங்கடை நாடு உருப்பட்டாப்புலதான்! இதுல இலங்கை டீம் காரருக்கு எங்க போச்சுது மண்டை அவரொருத்தர் நான் மாறிட்டன் நீங்கள் மாறல்லையோ எண்டு விளம்பரம் கொடுத்தாராம் முதல்ல உங்கடை இயல்புகளை மாற்றுங்கோ, காசிருந்தா மட்டும் காணாது கொஞ்சம் சிந்திக்கிற ஆற்றலுமத் தேவை பாருங்கோ, முன்னுதாரணமா இருக்க வேண்டிய நீங்கள் இப்படி கேவலமா இருக்கலாமே?


என்ன இழவை செய்கிறார்கள் இந்த இளைய சமுதாயத்தினர் தமிழ் நாட்டின் ஏதோவொரு மூலையில் இருக்கிற மாணவர்களுக்கிருக்கிற அக்கறை கூட இவர்களிடம் இல்லையே அவர்களுடைய நாடு, அவர்களுடைய தோழர்கள், அவர்களுயைட உறவினர்கள், அவர்களுடன் வேலைசெய்பவார்கள், நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு கொடுப்பவர்கள்,என்று ஒரு சின்ன உணர்வு கூட இல்லையா இந்த மாணவர் சமுதாயத்துக்கு!

மாணவர் சக்கதி மஹாசக்தி என்று கேள்விப்பட்டிருக்கிறேன் இலங்கையின் பல்கலைக்கழகங்கள் முயன்றாலே போதுமானது இந்த யுத்தத்தை நிறுத்தவும் சுமுகமான தீர்வொன்றை முன்னெடுக்கவும் ஆனால் செய்கிறார்கள் இல்லையே.

முன்பே சொன்னது போல திருந்தினால் இலங்கையியன் மயிராண்டிகள் திருந்த வேணும் இல்லையெண்டால் இலங்கையை மீட்டெடுக்கமுடியாது...

சிந்தனை வளர்சச்சியும் புரட்சியும் இல்லாத சமுதாயங்கள் முன்னேறியதாக சரித்திரமே இல்லை தமிழ் பேசுகிறவ்ர்கள் இலங்கையில் இல்லாமல் போனால் இலங்கையின் அடிப்படை நாகரிகமே வேறுமாதிரி இருந்திருக்கும், மற்றய நாடுகள் வந்து வேறெதுவும் செய்துவிட்டுப்போகிற சின்த்தீவாகத்தான் இருந்திருக்கும்...

ஒப்பாரி...

புதுப்படம்..
ஷொப்பிங்...
நயன்தாரா...
அரட்டைகள்...
அடுத்த வீடுகள்..
ஏற்பாடுகள்...
சரவணா ஸ்டோர்ஸ்...
chating & dating,
where is the party today?!
whats up?

__________________________

தம்பி என்ன விஷேசம்:)
களநிலவரங்கள் எப்படி,
முல்லைத்தீவை வளைச்சுப்போட்டாங்களாம்
இண்டைக்கு சண்டை நடந்தது எண்டுறாங்கள்?

அண்ணன் என்ன மயிருக்கு நியூஸ் கேக்கிறியள்!
என்ரை வாயைக்கிளறாதையுங்கோ...!!

__________________________________________

நாங்கள் என்ன செய்யுறது மச்சான்
எல்லாம் பொலிடிக்ஸ்
அதே பிழைகள்!
அதே துரோகங்கள்!
இந்தியா ஏதாவது செய்திருக்கலாம்...

________________________________


உடுப்பு தோய்க்க இருக்கு,
காலமை அஞ்சு மணிக்கு எழும்ப வேணும்,
மாத அறிக்கை செய்து முடிக்கவேணும்
மனேஜரோட meeting இருக்கு,
வீட்டுக்கு காசனுப்ப வேணும்...

______________________________

ஒழுங்காக சாப்பிட முடியவில்லை
விரும்பி பார்க்கிற பாடல்களை ரசிக்க முடியவில்லை
எந்த செய்தித்தளங்களையும் வாசிக்க பிடிக்கவில்லை
புத்தகங்கள் வேண்டாம் என்றாகிறது...
அருகே இருக்கிறவளை கவனிக்க முடியவில்லை,
அழைக்கிற மனைவியை அணைக்க முடியவில்லை...

___________________________

காசா(gaza)
ஒபாமா...
சிவசங்கர் மேனன்
திருமாவளவன்...
டாக்டர் முதல்வர் கலைஞர்..
மஹிந்த,ரணில்...
கருணா...

_____________________

எழுதாதவர்கள் எல்லாம் எழுதுகிறார்கள்!
பேசாதவர்கள் எல்லாம் பேசுகிறார்கள்!
அழதவர்கள் எல்லாம் அழுகிறார்கள்!
பயம் இன்னும் கொஞ்சம் கூடியிருக்கிறது!
ஏக்கங்கள் சமநிலைகளை குழப்புகின்றன!
சுதந்திரம் படுக்கையறைகளுக்குள் முடங்கி இருக்கிறது...

___________________________

பொழுது விடிகிறது...
உலகம் வழமைபோல இருக்கிறது
யுத்தங்களும் கொலைகளும்...



பின்குறிப்பு:

\\
நானும் அதே ஆதிக்குடிகளில் ஒருவன்!எனக்கான கலாச்சாரம், பண்பாடு, உணர்வு எனக்குள்ளே இருக்கிறது!

\\
கையாலாகாதவர்களுள் நானும் ஒருவன்(என்னால் இன்னொன்று முடியும் இருக்கிற இடத்துக்கு ஏற்றது போல வாழப்பழகிக்கொண்டேன்!)


\\

யுத்தம் நிறையக் கற்றுக் கொடுத்திருக்கிறது!

விஜய் கேட்ட வரம்...!!!




ராமன் கிட்ட வில்லு கேட்டன் பீமன் கிட்ட கதையக்கேட்டேன் அப்படின்னு பாடி நம்ம கிட்ட அன்பையும் கேட்டிருக்காரு அது வழமையா அவர் கேட்கிறதுதான் எண்டாலும்...

அந்தப்பாட்டுல குஷ்பு ஒரு பாட்டுக்கு வந்து ஆடினது கூட ஒண்ணும் பெரிசா எபெக்ட் ஆகையில்லை. ஏன் இன்னொரு பாட்டுல அஸினுக்கு இவர் செய்த மாதிரி நயன்தாரா இவருக்கு செய்தது கூட பொறாமையாத்தான் இருந்தது( சீனை பாக்க முன்னமே இதுதான் எண்டு விளங்கிட்டுது ஆனா பாட்டுலயும் காட்டுகினை அஸினை) இதெல்லாம் பெரிசில்லை ஆனா...

அவர் கடவுளிட்டை கேட்ட வரம்தான் எனக்கு பெரிய பாதிப்பை கொடுத்திடுச்சு...
"கடவுள் என் வரம் வேணும்னு கேட்டா
அகதியான மக்களுக்கு
அமைதியான நாடு கேட்பேன்"


அப்படின்னுட்டாரு...
(என்ன எல்லாருக்கும் பிழைப்புத்தேடுற விசயமாப்போச்சு எங்கடை நிலமை)


ம்ம்ம்...கடவுள் எப்ப வந்து....எப்ப வரம் குடுத்து...அது எப்ப நடந்து...கடவுளே! உனக்கு காதிருந்தா!! (முதல்ல கடவுள் இருக்ககிறாரோ எண்டுறது கேள்வி)இருந்தா விஜய் அண்ணாச்சிக்கொரு வரம் கொடுக்க கூடாதா...?

"வில்லு பவர் புல்லு" - விஜய் அண்ணன் இது போதும் உங்களுக்கு அதை விட்டுட்டு தேவையில்லாத விசயங்களுக்கள்ளை தலைப்போடக்கூடாது பிறகு ரசனி அங்கிள் மாதிரி நிறைய பதிலுகள் சொல்ல வேண்டியும் மன்னிப்பு அறிக்கைகள் விட வேண்டியும் வரும்!

ஆ இன்னுமொண்டு இருக்கு... அதுதான் முக்கியம்!

சில விசயங்களை கேட்கிறதைவிட பாக்கிறதுதான் இன்ரஸ்டிங்கா இருக்கும,ஸீ மீ இன் ஆக்சன்! (see me in action)

அது! அது போதும் உங்களுக்கு!

உதைத்தான் இப்ப பெரும்பாலான பதிவர்களும் ஊடகங்களும் சொல்லிக்கொண்டிருக்கினை
சோ ...ஸீ தெம் இன் ஆக்சன்... (so...see them in action!)

சொல்ல விரும்பாதவை - 03-01-2009

யாரோ ஒருவர் செத்துப்போனார்...
ஏதோ ஒரு குடும்பத்தில் இழவு விழுந்திருக்கிறது
இன்னொரு சின்னப்பிள்ளை கைசிதறி விழுந்திருக்கிறது
அதற்கொரு தாய் அழுது கொண்டிருக்கிறாள்
அவள் புருஷனை எப்பொழுதோ புதைத்தாயிற்று
அடையாளம் காணப்பட முடியாத வளவொன்றில்!
திருப்தியான பொருளாதாரம் தேடிப்பார்த்தாலும் தெரியவில்லை...
தேகம் சாதாரணமாய் சந்தைக்கு வருகிறது!
பௌத்தம் காவிக்குள் சுருண்டு கொள்கிறது...
பதவி நினைத்ததை செய்கிறது!
-

இடைக் குறிப்பு:

எதுக்கிந்த யுத்தம் மச்சான்...

நீயும் நானும் சிங்களம்-தமிழ் என்னோட உனக்கு தண்ணி அடிக்க ஏலும்,என்னோட வேலை செய்ய ஏலும்,ஏன் என்ர ஊர் பெட்டையை கலியாணமும் கட்ட ஏலும் ஆனா மச்சான் என்ரை உரிமைல உன்னால கை கைவக்க ஏலாது!

-
புத்தாண்டு பிறந்திருக்கிறது கொண்டாடுகிறேன்
அல்லது கடமைக்கு வாழ்த்து சொல்கிறேன்...
அங்கே ஓரிடம் அகப்பட்டு விட்டது...
இங்கே அதற்கொரு கொண்டாட்டம்!
எனக்கு பசிக்கிறது நான் சாப்பிடுகிறேன்...
எனக்கு வருகிறது நான் போகிறேன்!
என்னிடம் இருக்கிறது நான் செய்கிறேன்..
எனக்கு தோன்றுகிறது நான் எழுதுகிறேன்!
.............எழுதுகிறேன்...
ஈழம்..... சிங்களம்..... அரசியல்
மஹிந்த.....கிளிநொச்சி...

என்ன...?!
மயிரு இழுத்து மூடிட்டு படு...
விடிஞ்சா சோத்துக்கு வழியப்பார்றா பு..



பின் குறிப்புகள்:

*
"அபே ரட்ட தெக்கட்ட கடன்ட தென்நா" - எங்கடை நாட்டை இரண்டா பிரிக்க விடமாட்டம்
*
இலங்கை எங்கட நாடு அதில எங்க வேணுமெண்டாலும் யாரும் இருக்கலாம்-
*
"பிரபாகரன் ரஸ்தவாதி" - பிரபாகரன் தீவிரவாதி
*
"தெமிழ கட்டிய மொளே நத்தி கட்டிய"- தமிழ் ஆக்களுக்கு மூளை இல்லை...
*
"மம பஹாட்ட கலிங் யன்டோன எக்கனைக்குட்ட பன்சியாய்"- நான் அஞ்சு மணிக்குள்ள போகவேணும் ஒரு ஆளுக்கு ஐநூறு ரூபா!