பிரிய தர்ஷினியும் குருவியும்...

பிரிய தர்ஷினியும் குருவியும்... இவளை என்னவென்று சொல்ல...

"இந்த காலத்து இளைஞர்கள் என்ன மாதிரி சமுக சிந்தனையோட நாட்டுக்காக செயல்படணுங்கிற உயர்ந்த கருத்தோட குடும்பத்தையும் தகப்பனையும் காப்பாற்றுதல், நாட்டை சமூக துரோகிகளிடம இருந்து காப்பாற்றுதல், காதலியை காப்பாற்றி குடும்பத்தோடு சேருதல்ங்கிற முப்பரிமாண கதாபாத்திரத்தில விஜய் சிறப்பாக நடடிச்சிருக்கிற படம்தான் குருவி" இந்த கருத்தை நான் சொன்னதுன்னு தப்பா எடுத்துக்காதிங்க,இது நம்ம கலைஞர் ரிவி படவரிசை படத்துல பிரிய தர்ஷினி சொன்னது...

பிரிய தர்ஷினிக்காக சில நேரங்களில் நான் பார்க்கிற நிகழ்ச்சிகளில் கலைஞர் ரிவி படவரிசை பத்தும் ஒன்று. நேற்று எதேச்சையாக "நைட் டியுட்டி" முடிஞ்சு அறைக்கு வந்து ரிவியை போட்டால் நிகழ்ச்சி போய்கொண்டிருக்கு வேலை முடிந்து வந்து செய்கிற வழைமையான காரியங்களை கவனித்துக்கொண்டே பிரிய தர்ஷனியை... மன்னிச்சுங்குங்க நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தேன், அப்ப இரண்டாவது இடத்துல இருக்கிறது நம்ம குருவி படமென்று ஏற்கனவே தெரிஞ்சாலும் அதுக்கு பிரிய தர்ஷனி சொன்ன கருத்து இருக்கே நான் அப்படியே கடகடகன்னு சிரிச்சசிட்டேன். அந்தப்பொண்ணு வார்தைகனைள நல்லா உச்சரிக்கும்றதுக்காக எதை வேணும்னாலும் எழுதிக் கொடுத்திடுவிங்களா மக்காள்; என்னைய இப்படி சிந்திக்க வச்சிட்டிங்களே? அது என்னண்ணே முப்பரிமாண கதாபாத்திரம்? அப்ப தசாவதாரம் எத்தைனை பரிமாணம்ணே... சரி சிரிச்சதுல என்ன தப்புங்கறிங்களா நல்ல வேளை நான் மட்டும்தான் அறையில இருந்தேன் அறை நண்பன் இருந்திருந்தான்னா என்னாச்சோ ஏதாச்சோன்னு பயந்திருப்பான் வீட்டுக்கு பண்ணி சொன்னாலும் சொல்லியிருப்பான் ஏனெண்டா சமீப காலமா தமிழ் மணம் தவிர வேற காரியமே கிடையாது எனக்கு,அதில்லை அப்படின்னா நேரங்களில்றூமிலதான் இருப்பேன் றூமில இருக்கிறப்போ... றூம்மேட்ஸ் கலைஞர் ரிவிதான் அதிலையும் வைர செஞ்சம் நம்ம குடும்பம்னு போட்டு என்னோட பிறசரை கூட்டுறதுல என்ன சந்தோசமோ தெரியலை இந்த சீரியல் காரங்களுக்கு, கலைஞர் ரிவியை போட்டு பாக்கிற நிகழ்ச்சிகளை பாத்தால் கொலைவெறிதான் வரும் திட்டிதீர்த்திடுவேன்,சில என்னையும் அறியாமல் சிரிப்பு வந்திடும் இதைப்பாத்த்து பாத்து அவங்கள் எனக்கு ஏதோ நடந்திடிச்சு என்று நினைச்சதுல தப்பில்லைதானே......அடிக்கடி எனக்கும் அறை நண்பர்களுக்கும் சண்டையெல்லாம் கூட வந்திருக்கு பின்ன தாங்க முடியாம நான் ரிவி பண்ணினா சும்மா இருப்பாங்களா ஆனா அதுவும ஒரு சுவாரஸ்யமான தருணங்கள்தான்...

இதை விட கொடுமை என்னன்னு கேட்டிங்கன்னா!

தங்கச்சி வந்து அக்காவை நல்லா இருக்க விட மாட்டேன்னு பொருமுறதும், அக்கா வந்து நான் மாமனார் பேருல வியாபாரம் தொடங்கறேன் நீங்கல்லாம் ஆதரவு தருவிங்கன்னு நம்புறோம்னு நம்ம தலையில மிளாகாய் அரைக்கப் போறோம்னுறதை வேற மாதிரி சொல்லுறதும் என்ன கொடுமையப்பா இது தமிழ் நாடே இப்படித்தான் இருக்கா அல்லது???? இந்த ஸீரியல் பாக்கிற பெண்களுடைய மனநிலை எப்படி இருக்குங்கிறத வச்சு ஒரு ஆராய்ச்சி பண்ணினா நல்லா இருக்ம்னு நினைக்கிறேன்(வெள்ளைக்காரன் எது எதுக்கோல்லாம் ஆராய்ச்சி பண்ணும்போது...)அதுக்கப்புறம் மெகா ஸீரியலை தடைசெஞ்சாலும் செஞ்சுருவாங்க பின்ன என்னங்க நல்லவங்க எப்பவுமே சோப்பிணாங்கி மாதிரி அழுதுகிட்டே இருப்பாங்களாம் கெட்டவங்க செய்யுறதெல்லாம் செய்து சந்தோசமா வாந்துட்டு வாழந்து முடியுற நாட்களில வந்து (அப்புறம் சீரியல் முடிய அவ்வளவு நாள் ஆகாதா) மன்னிப்பு கேட்க நல்லவுங்க பெருந்தன்மையா மன்னிச்சுருவாங்களாம் அப்படின்னா நல்லவங்களுக்கு வாழ்க்கை இப்படித்தான் இருக்குமா...?

அது மட்டுமில்லை இப்பல்லாம் பழைய படங்கள்ள இருந்து எடுத்து அங்கங்க சிச்சுவேசன் சாங் போடுறாங்கப்பா சீரியல்ல அதை விடுங்கோ பரவாயில்லை.. கடைசியா என் கண்ணுல பட்ட சீரியல் எபிஸோட்டோட முடிவில சொத்தெல்லாம் எழுதிக்கொடுத்துட்டு பிரிஞ்சு போய் வியாபாரம் பண்ண இருக்ககிற அக்கா வோட பாங்க் லோனை தடுக்கிறதுக்காக பாங்க் போய் குழப்பிட்டு வந்து அவளை நடு ரோட்டுல கஷ்டப்பட வைக்கணும்னு சொல்லுவா அந்த ஸீனோட தொடரும் போடுவாங்கன்னு பாத்தா தங்கச்சியோட முகத்தை திரையில விட்டுட்டு...
இவளை என்னவென்று சொல்ல ...?

அப்படின்னு முடிப்பாரு டைரைக்டர் சிகாமணி, அடப்பாவிகளா பிழைப்புக்காக இந்த மாதிரி சீரியல் எடுக்கிற

உங்களை என்னவென்று சொல்ல...?

ஒரு கிலோ அரிசி 130 ரூபா, சடலங்கள் மீட்பு...

யாழ்ப்பாணத்துல இருக்கிற பிள்ளையளுக்கு சாப்பிட வழியில்லை படிக்கவும் வழியல்லை இருந்தாலும் எங்கடை பிள்ளையள் படிப்பை கைவிடுறதில்லை எண்டுறதிலை எனக்கு தனிப்பட்ட பெருமை இருக்கு விளக்கு கொழுத்து மண்ணெண்ணை இல்லையெண்டாலும் படிச்சு கம்பஸ் போற பிள்ளையள் எங்கடை பிள்ளையள் ஆனா இண்டைக்கு இருக்கிற நிலமையைப்பாத்தா பயமாயிருக்கு நாட்டில சனமில்லை இருக்கிற சனத்துக்கு வாழ வழியில்லை! என்ன செய்யுறது...பின்ன என்னத்தை நான் சொல்ல ஒரு கிலோ அரிசி 130 ரூபா எண்டால் மற்ற தேவையான சாமான்களின்ரை விலையை கேக்க வேணுமோ...?விலைவாசியை கவனிக்கிறதுக்கெண்டு இருக்கிற ஆக்களும் ஒருத்தரும் கடைமையில இல்லையாம் பாவம் அவையளுக்கு எத்தினை கஷ்டமோ? கப்பல்ல வாற கொஞ்ச சாமான்கள் தான் எல்லா தேவைக்கும் எண்டால் என்ன செய்யுறது யாழ்ப்பாணம்??? ஆரோ சொன்ன மாதிரி யாழ்ப்பாணத்தல இருக்கிற சனம் எல்லாம் மன உளைச்சலால பாதிக்கப்பட்டிருக்காம் பொறுத்துக்கொள்ளுங்கோ தாகம் தீரேக்க இருக்கிற மிச்சம் சொச்சம் சனமும் என்னநிலமைக்கு வந்துடுமோ ஆருக்கு தெரியும்...!?


***
அவைத்தலைவராம் அது யாரை அவைத்தலைவர் எண்டு சொல்லுறதெண்டு எனக்கு தெரியாது ஆனா அவற்றை பெயர் நிமால் சிறீ பால டி சில்வா எண்டு சொல்லிச்சினை அவரென்ன சொல்லியிருக்கிறார் எண்டால் இலங்கையில மட்டுமில்லையாம் உலகம் முழுக்க இதுதானாம் நடக்குதெண்டு உலகம் முழுக்க உதே நடக்குகுது நான் தெரியமத்தான் கேக்குறன் எந்த ஊரிலை நடக்குது இந்த மாதிரி கேவலமான பொருளாதாரத்தோட தேவையில்லாத ஒரு பிரச்சனை...

***
நாட்டில சாப்பிட வழியில்லை, நிம்மதியா இருக்க வழியில்லை இந்த கேட்டுக்குள்ள அவையின்ர தரப்பில இந்தனைபேர் பலி, இவையின்ர தரப்பில இத்தனைபேர் பலி, பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்று, காவலரண்கள் சேதப்படத்தப்பட்டது, எண்டு பெருமையான செய்திகள் வேறை-அதுக்கு மாறி மாறி மறுப்பறிக்கைளும் என்ன கொடுமையப்பா இது!. போதாக்குறைக்கு அந்த பஸ்ஸில குண்டு வெடிப்பு, இந்த கடையில குண்டு வெடிப்பு, அந்த இடத்தில குண்டுத்தாக்குதல், இந்த இடத்தில இத்தனைபேர் பலி எண்டும் அதுக்கு போட்டியா இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொலைகளும், ஆள் கடத்தல்களும், சடலங்கள் மீட்பும் எண்டு எந்தப்பத்திரிகையை பாத்தாலும் நாட்டின்ரை பெருமை சொல்கிற செய்திகள் தானே வருகுது மற்ற நாடுகளைப்போல; இதிலை விலைவாசி கூடினா நாட்டுக்கொண்டும் குறையப்போறல்லை தானே...?

நான் தசாவதாரத்தை எழுதப்போதில்லை...

தசாவதாரம் தசாவதாரம் தசாவதாரம் எங்கு பார்த்தாலும் தசாவதாரம் முறையாக படத்தை பாத்தவங்க எழுதினாலும் பரவாயில்லை சும்மா ஒரு தகவல் சொல்கிற பதிவு போட்டவங்க கூட தசாவதாரத்தோட சம்பந்தப்படுத்தி தலைப்பு வச்சு போட்டிருக்கினம்.படம் பார்த்தவர்கள், பார்க்காதவார்கள், படம் பார்க்கப்போய் பாக்க முடியாமல் வந்தவர்கள்,படம் பார்த்து நொந்தவர்கள் என்று பலதரப்பட்ட திறமை சாலிகளும் பதிவு போட்டிருந்தினம்.பதிவுகளை படிச்சதிலயே படத்தை ரசிக்க முடியாமல் போய்விட்டது படம் பாக்கப் பாக்க பதிவுகளின்ரை தலைப்புகள் வந்து பயமறுத்திக்கொண்டே இருந்தது கடைசியில கிடைச்ச மட்டமான குறுந்தகடும் விமர்சனங்களும் சேர்ந்து படத்தை பைத்தியக்காரனின் தசாவதாரம் பதிவின் தலைப்பு மாதிரி ஆக்கிவிட்டது. http://naayakan.blogspot.com/2008/06/blog-post.htm(பதிவுக்கான தொடுப்பு இது)

ஒரு படம் எடுத்திருக்கினம் அதுக்கு கொஞ்சம் ஓவரா பில்டப் குடுத்திட்டினம் அது சரி அதுக்காக அதை கிழிச்சு தொங்கவிட்டா எப்படி...சினிமாவில இதெல்லாம் சகஜமப்பா ...

"இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாய்க்கிப்புட்டாய்ங்கடா" எண்டு வடிவேலு சொல்லுறது மாதிரி உலக நாயகன் உலகத்தரம் என்று சொல்லிச் சொல்லியே படத்தை பற்றிய எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியதும் இந்த எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஒரு காரணமாகலாம்... தேவயில்லாதது பத்து வேடங்கள் அவசியமற்ற பாத்திரப்படைப்புகள் என்று கமல் இந்தப்படத்தில் தன் சுயத்தை இழந்திருப்பது தெரிகிறது...

மற்ற படி இந்த வைணவர் - சைவர் கமல்; கடவுள் இருக்கிறாரென்கிறாரா இல்லையென்கிறாரா அல்லது கடவுள் வேணுமென்கிறாரா என்கிற நுண்ணரசியலெல்லாம் எனக்கு தெரியாதப்பா...

கமல் நல்ல கலைஞன் என்பதில் எனக்கு உடன்பாடு இருக்கிறது...நல்ல உடல் மொழியும் இயல்பான நடிப்பும் அவருக்கு வாய்த்திருக்கிறது..ஆனால் தசாவதாரம் போன்ற படங்களை விட சாதாரணமான உணர்வுகளை சொல்கிற படங்களில் அவரால் நிறைய ஜொலிக்க முடியும் என்பது என்கருத்து...

இது என்ன கரைச்சலப்பா தசாவதாரத்தை எழுதப்போவதில்லை எண்டு சொல்லிப்போட்டு அதைத்தானே எழுதிக்கொண்டிருக்கிறியள் எண்ட சலிப்புகளுக்கு முன்னால் கமலை நான் ரசித்த ஒரு படத்திலிருந்து...ஒரு காட்சியோடு பதிவை நிறைவுசெய்கிறேன்...

http://www.youtube.com/watch?v=6c_y0_fSPp0

படத்தின் காடசியை பதிவிலேயே காடசிப்படுத்தினால் சுவாரஸ்யம் இருக்காது அதனால் பதிவுக்கான தொடுப்பு மட்டும் கொடுத்திருக்கிறேன் (பொறுமை பொறுமை) பாத்துக்குங்க..

பின்குறிப்பு: நான் இன்னமும் படம் பார்க்கவில்லை...

சிறப்பு உறுப்பினர் பாலகுமாரனும் நானும்...

முதல்ல என்ரை கண்ணுல பட்ட ஒரு செய்தி ....

விகாரமாதேவி கருவுற்றிருந்த போதும் தமிழின அழிப்பு வெறி இருந்தது: க.வே.பாலகுமாரன்
[புதன்கிழமை, 28 மே 2008, 03:21 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
துட்டகைமுனுவின் தாய் விகாரமாதேவி கருவுற்றிருந்த வேளையில் கூட தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற வெறி இருந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.
முறிகண்டியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் பலியெடுக்கப்பட்ட மக்களின் வணக்க நிகழ்வில் உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
2500 ஆண்டு காலமாக குருதி குடிக்கும் வெறியில் தமிழினத்தை சிங்களம் படுகொலை செய்கின்றது.
தமிழினத்தை அழிக்கும் வெறி சிங்கள மக்களிடம் உறைந்து போய் உள்ளது. துட்டகைமுனுவின் தாய் விகாரமாதேவி கருவுற்றிருந்த வேளையில் தமிழனின் பச்சைக்குருதியை குடிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது என்று அவர்களின் இதிகாசம் சொல்கின்றது.
தேசத்தின் இருப்பில் இந்தப் படுகொலைச் செய்தி இடிக்கு மேல் இடியாக வந்து சேர்ந்தது. பாரதிபுரத்திலும் மலையாளபுரத்திலும் காற்று ஆடவில்லை.
தமிழின அழிப்பு என்பது சிங்கள அரசின் வேர்களில் காலம் காலமாக உள்ளது. பெரும் புயல் காற்றில் விளக்குச்சுடர் அசைகின்ற மாதிரி நாம் அசைகின்றோம்.
இத்துயரத்தை அழுது கொட்டிய பின்னர் இந்தப் பெற்றோரை, உறவுகளை, இழந்தவர்கள் நாளைக்கு ஒளியாக மாறி பின் பொறியாக மாறுவார்கள். அவர்கள் தேசத்தின் விடுதலையை வென்றெடுக்க உதவுவார்கள்.
இந்த பசுந்தளிர்களை பக்குவமாக வளர்த்தெடுத்து சிங்கள அரசிற்கு தக்க பாடம் புகட்டவேண்டியது நமது கடமை என்றார்.

இப்ப நான் புலம்பின கதையள்...


என்ன 2500 வருசத்துக்கு மந்தியோ என்ன கொடுமையப்பா இது நான் 30 வருசத்துக்கு முந்தின கதையே வேண்டாம் எண்டு சொல்லுறன் இது என்னடாண்டால் 2500 வருசத்துக்கு முதலே இருந்ததாம்.. கொடுமையடா சாமி...

நாங்களும்தானே அங்கங்க குண்டுவச்சு பீதியைக்கிளப்புறம்; அதுக்கென்ன சொல்லுறியள் அடிக்க வராதையுங்கோ ஐயா நான் சின்னப்பெடியன் உண்மையா எனக்கு நல்ல சிங்கள நண்பர்கள் இருக்கிறார்கள் என்ரை நண்பர்களுக்கு ஒரு கவலையெண்டால் அது எனக்கும்தானே நீங்களே சொல்லுங்கோ உங்கடை ஆக்களுக்கு ஒரு கவலை எண்டால் அது உங்களையும் கஸ்டபபடுத்தும்தானே... நல்ல சந்தோசமான வாழ்க்கை வாழத்தானே அழுது கொண்டு பிறக்கிறம்...

தேவையில்லாம நாட்டுக்குள்ள நடக்கிற பதிலுக்கு பதில் பிரச்சனைகளால நல்லதொரு இளைய சமுதாயம் நாசமாப்போகுது மஹிந்தவும் சொல்லுக்கேக்க மாட்டார் அந்தப்பக்ம் இருக்கிற ஆக்களும் அப்பிடித்தான் அதாலை நீங்கள் ஆரையாவது இல்லாமப்பண்ணோணும் எண்டால் யுத்தத்தையும் உந்த கேவலமான அரசியல்வாதிகளையும் இல்லாமப்பண்ணுங்கோ அதுக்கு நானும் வாறன்....

ஏனிந்த கொலை வெறி உங்களுக்கு 2000 ம் ஆண்டு பிறந்த எந்தக்குழந்தைக்கு தெரியும் யுத்தமும் இனப்பிரச்சனையும் அதுகளுக்கெல்லாம் ஏனிந்த கொடுமை...

பேசுறதுக்கு ஒரு மேடைகிடைச்சாப்போதுமே உப்பிடித்தான் நடேசண்ணனும் கடுகு சஞ்சிகை வெளியீட்டுல பேசினார் அவர் பேசினதுலயும் உப்பிடித்தான் பெடியளுக்கு படிப்பு வேணும் கல்வி வசதிகள் வேணும் அப்படி இப்படி என எல்லாம் சொன்னார் ஆனால் அதுக்கான சூழலைப்பற்றி ஒண்டும் சொல்லையில்லை வன்னிக்க இருக்குற பெடியளுக்க படிக்க மனம் வருமே நீங்களே சொல்லுங்கோ படிக்கிற பெடியளுக்கு "படி" எண்டு கூட தேவையில்லாம சொல்லக்கூடாதாம் ஆனா பெடியள் படிக்குதுகளோ இல்லையோ அதுகளுக்கு கட்டாயம் துவக்குப்பிடிக்கதெரிய வேணும், அது, இது எண்டு பல பிரச்சனைகள் பிள்ளை எப்படிப்படிக்கும்...

பழைய கதையளை பேசாதையுங்கோ அண்ணன்...

2500 வருசத்துக்கு முன்னமே அழிக்க நினைச்சால் இந்தளவுக்கு அழிஞ்சிருக்கோணும் அந்த அந்த பழைய கதைகளெல்லாம எதுக்கு ஐயா எங்களுக்கு நாங்க இப்பத்தான் பிறந்திருக்கோம் இன்னும் எவ்வளவு நாளைக்கு வாழ்வோம் சொல்ல முடியாதே ... அதனால விட்டுடுங்க வாழ்ந்துட்டுப்போறோம்

இது நான் மட்டும் சொல்லுற கதையில்ல நிறைய சகோதர மொழி நண்பர்களும் இதைத்தான் சொல்லுகினம். இளைய சமுதாயம் புரிந்துணர்வோடு இருக்கிறது சோத்துக்கும் பணத்துக்கும் கும்பிடு போடுற சில மோடையர் கூட்டம்தான் யுத்தத்தை தூண்டுகிறது மக்கள் துணிந்துவிட்டால் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள்...


நீங்கள் இப்பிடிச்சொல்லுறியள் வன்னிக்கை இருக்கிற சனம் என்ன சொல்லுதண்ணன் மிச்சமிருக்கிற வாழ்க்கையை என்ன செய்யுறதெண்டு யோசிக்குது அப்பிடித்தானே...

கொஞ்சம் பொறுங்கோ அடுத்த பதிவில எங்கடை மஹிந்த மாத்தையா என்ன சொல்லுறார் எண்டு பாப்பம் அது இதைவிட பெரிய கொடுமையா இருக்கும் போல...