பாத்து பொறாமைப்படுங்கோ வேற என்ன செய்வியள்...!

பதிவின் தலைப்பு மதிப்புக்குரிய இலங்கையின் மக்களுக்கு உரியது அதனால மற்றவர்கள் குறை கொள்ள வேண்டாம்...

எனக்கு மின்னஞ்சலில் வந்த படங்கள்தான் ஆனால் என்ன செய்ய என்ரை வயித்தெரிச்சலைக் கிளப்புற 'மெயில்' அனுப்புறதில அவங்களுக்கும் ஒரு சந்தோசம்...!அனுப்பட்டும் அந்த வயித்தெரிச்சைல உங்களோடையும் பகிர்ந்து கொண்டு "பெருமைப்படுகிறேன்"!

ஜெப்பானின் ஹிரோஷிமா, நாகசாயி எல்லோரும் கேள்விப்பட்ட இடங்கள்தான் ஆனா அது அணுகுண்டு போட்டு அழிஞ்ச இடமெண்டுற வகையிலையாத்தான் இருக்கும். அந்த இடங்கள் இப்ப எப்படி இருக்ககெண்டு எங்கடை இலங்கையின்ரை **ராண்டிகளுக்கு தெரியவேண்டாமே அதனாலதான் இந்த மெயில ஆளாளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறாங்கள்...

இலங்கையின்ர பெருமை பேசுற 'மெயில்களும்' திரியுது அது எப்படியான மெயிலுகள் எண்டு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேணும் எண்டுறதில்லை...

பாத்து பொறாமைப்படுங்கோ வேற என்ன செய்வியள்...!!!???




























We all know that Hiroshima and Nagasaki were destroyed in August 1945 after explosion of Nuclear bomb.
However little we know about progress the people of that land made during the past 62years.
Here are some photos.

THE COLOURFUL CITY...!


பாத்து பொறாமைப்படுங்கோ வேற என்ன செய்வியள்...

இருபத்தைந்து ஆண்டுகளின் பின்னரும்...!

நடந்து இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்து விட்டது...இருந்தும் எந்த மாற்றமும் இல்லை இலங்கையில்,இன்னும் சிக்கல்கள் அதிகமாயிருக்கிறதொழிய மாற்றம் எதுவும் ஆக்க பூர்வமாக இல்லை. கலவரமாக இல்லையே ஒழிய இன அழிப்பும் உயிரழிப்பும் நடந்து கொண்டே இருக்கிறது...!
இருபத்தைந்து ஆண்டுகளின் பிறகும் சந்ததிகளின் சிந்தனையில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய விடயம்...! என்னதான் உலகமும் அறிவும் வளர்ச்சி அடைந்தாலும் இலங்கை மஹா ஜனங்களின் சிந்தனை வளர்ச்சி அந்த அளவில்தான் இருக்கிறது. என்ன செய்து கொண்டிருக்கிறது இந்த இளைய சமூகம்! எதுவும் விளங்காமல் இருக்கிறதா அல்லது, எமக்கென்ன என்கிற போக்கில் போய்க்கொண்டிருக்கிறதா?! இறப்பும் இழப்பும் சுயத்துக்கு நிகழும் பொழுதில்தான் பாதிப்பை உணருமா?! அல்லது எல்லாம் தெரிந்தும் எதுவும் செய்ய முடியாத கையாலாகத்தனத்தில் இருக்கிறதா?!எனக்கென்றால் எதுவுமே புரியவில்லை...!


எழுக இளைய சமுதாயமே புதிதாய் பிறந்த நாம் இன்னும் அதே பழைய கேவலங்களிலேயே உழலுவதா படித்த பகுத்தறியும் திறண்படைத்த உனக்கு இலங்கையின் இந்த நிலமை அரசியலின் தந்திரம் என்பது இன்னமும் புரியவில்லையா...?

பழைய கதைகளைப்பேசி நாட்டை கூறுபோடுகிற பிணந்தின்னிகளின்கையில் இன்னமும் நம் நாடு இருக்க வேண்டுமா...?

வேண்டாம் இந்த யுத்தம் நம்மிடம் மனிதம் இருக்கிறது அறிவும் ஆற்றலும் சிந்தனை திறணும் படைப்பாற்றலும் இருக்கிறது..

எழுவோம் இந்த நாட்டின் பொருளாதார அரசியலை மீளக்கட்டமைப்போம்

அன்பும் நட்பும் மட்டுமே பாராட்டுகிற புதமியதொரு சமூகம் படைப்போம்


கலவரங்கள் நினைவு கூர்வது ஏதாவதொரு மாற்றம் நிகழ்வதற்காகவே...

இருபத்தைந்து வருடங்கள் போதாதா இலங்கை ஜனங்களே உங்களுக்கு
நாம் இன்னமும் கறுப்பு பகல்களுக்கேள்தான் இருக்கிறோம் என்பதை கண்டறிய...

வேண்டாம் என்னருமை சகோதரர்களே...
இனியும் பொறுக்காதிருப்போம் நாட்டை யுத்தமும், அரசியலும், பழிதீர்க்கும் வெறியும் பாழ்படுத்துவதை...

இலங்கையின் வரலாற்றின் கறுப்பு பக்கங்களை மறப்போம் புதியதொரு இலங்கையை கட்டியெழுப்புவோம்!


http://padamkadal.blogspot.com/2008/07/1983.html

(யூலைக்கலவரம் தொடர்பான டி. ஜே அண்ணனின் பதிவு...)