ஜப்பானின் படங்களை பதிவாக்கிய அடுத்த நாளே இந்தப்படங்களை பதிவாக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் அப்பொழுதிலிருந்த மனோ நிலையில் பதிவாக்கத்தோன்றவில்லை. கிட்டத்தட்ட இருபத்தி ஒன்பது படங்களை பல தளங்களில் இருந்து தரவிறக்கி வைத்திருந்தேன்,இன்று அவற்றை சிலருக்கு மின்னஞ்சலும் செய்திருக்கிறேன்.
அப்பொழுதுதான் பதிவாக்கலாம் என்கிற எண்ணத்தையும் செயல் படுத்தலாம் என்று தோன்றியது.
படங்களை பார்க்கும் பொழுது தோன்றிய என் பல விதமான சிந்தனைகளையும் குறிப்புகளாக எழுதினாலே அது ஒரு புத்தகம் அளவுக்கு நீளும் என்பதால் படங்கள் மட்டும்
வன்னியில் எடுக்கப்பட்ட படங்கள்.தற்பொழுது நிலமை மேலும் கவலைக்கிடம்.
போதுமடா சாமிகளா இலங்கை படும் பாடு...!
பின்குறிப்பு அல்லது குமுறல்:
1)"மச்சான் லங்காவே ஜெயசூரியா நத்தங் பா மச்சான்"
2)"நாங்கள் ஐடியா கப்பும் பாத்தம்...மென்டிஸ் சுப்பர் போலிங் மச்சான்"
3)நான் இருக்கிற இடத்தில் எனக்கு இணையம் பயன் படுத்தக்கூடிய வசதி கிடைத்திருப்பதனாலலும் என்னிடம் வாசிக்கிற பழக்கம் இருப்பதனால் நான் சில நாட்களில்; தேவையான அல்லது குறிப்புகள் எடுக்க வேண்டிய ஏதாவது இருந்தால் அவற்றை பிரதி எடுத்து சென்று அறையில் வைத்து படிப்பது வழக்கம் என்பதனாலும் என்னிடம் தம்பி நாட்டு நிலமைகள் எப்படி என்று கேட்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற பதில் "அண்ணன் நான் அதுகள் பாக்கிறல்லை அண்ணன்"
பார்க்க விரும்பாத படங்கள்...!
Posted by King... at 8 comments
சொல்ல விரும்பாதவை - 12.08.08
ஒரே பேரூந்தில் பிரயாணம் செய்கிறோம்
ஒரே அலுவலகங்களில் பணி செய்கிறோம்
ஒரே பல்கலைக்கழகங்களில் படிக்கிறோம்
கடிதப்போக்கு வரத்து இருக்கிறது
மின்னஞ்சல் பரிமாற்றங்களும் உண்டு
தொலை பேசி வசதிகள் இருக்கிறது
பணம் கொடுத்து வாங்கப்படுகிறது
கடைகளில் உட்காந்து சாப்பிட முடிகிறது
கூட்டங்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறோம்
எல்லாமும் நடக்கிறது
ஆள்கடத்தல்,குண்டு வெடிப்பு
காணாமல் போதல், தாக்குதல்கள்
இடப்பெயர்வு இவைகளோடு!
Posted by King... at 5 comments
Labels: குமுறல் குறிப்புகள்...
சொல்ல விரும்பாதவை - 10.08.08
கொம்பனித்தெருவை
சுத்தப்படுத்தியிருக்கிறார்கள்
பத்து ரூபாவைக்காட்டி பிச்சைக்காரார்களை
அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்
சொறி நாய்களை பிடித்து அடைத்திருக்கிறார்கள்
சார்க் மாநாடு நடத்தி முடித்திருக்கிறார்கள்..
கோவணத்ததை கழுவி
கொடியா ஏத்தினாலும்
கோவணம் கோவணம்தானே...
கும்பிடுவதற்கு விரும்பினால்
தொணடர்கள் கிடைக்கலாம்
நம்புவதற்கு...
Posted by King... at 2 comments
Labels: குமுறல் குறிப்புகள்...