திலீபனின் நான்காம் நாள்...

பல நாட்களாக இணையப்பக்கம் வர முடியவில்லை அதனால் பதிய வேண்டும் என்று நினைத்த பல விடயங்கள் பதியப்படாமல் இருக்கிறது.இருக்கிற சூழலில் இருக்கிற மிக நெருக்கமான விடயம் இணையம் மட்டுமாகத்தான் இருந்தது அதற்கும் தற்பொழுது சிக்கல வந்திருக்கிறது.

புரட்டாதி 15ம் திகதி தியாகி திலீபனின் நினைவு நாட்கள் ஆரம்பமாகியிருக்கிறது வடக்கிலங்கை தற்பொழுது இருக்கிற நிலையில் அதனை நினைவு கூர்கிற நிகழ்வுகள் எந்தளவு இருக்கிறதென்பது எனக்கு தெரியவில்லை ஆனால் என்னிடம் அவன் நினைவுகளை அழிக்க முடியவில்லை...

ஒரு போராளி என்பதிலும் அவன் இயல்புகள் வகையாகத்தான் என் மனதுக்கு அவன் நெருக்கமாயிருக்கிறான்.நிறைய பதிந்து போயின அவனுடைய நாட்களின் நினைவுகளும் அவற்றை நான் சிறுவயதில் நினைவு கூர்ந்த நிகழ்வுகளும்...

எப்பொழுது நினைத்தாலும் கண்ணீர் துளிகளை வரவழைத்து விடுகிற காட்சிகள் அவன் உண்ணாவிரதம் இருந்த காட்சிகளும் அதன் நினைவுகளும்...


ஈழத்தின் அனைவர் மனதிலும் அவனுக்கென்று தனி இடம் இருந்தாலும் என் மனதில் அவனுக்கு முதலிடம் இருந்தது ஈழ வரலாற்றில் எனக்குள் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியது இவன் மட்டும்தான்...

உயிரை சொட்டுச்சொட்டாய் விட்ட வீரன், உண்மை மாவீரன் அவன்! அந்த இளம் வயதில் அவனுக்கிருந்த கொள்கைப்பிடிப்பும் மன உறுதியும் தியாகமும் சாமானியர்களால் முடியாத காரியம்.

ஈழ வரலாற்றில் எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் என்றும் என் மனதில் மாறாத இடத்தில் இருப்பது திலீபன்தான் அர்த்தமுள்ள போராளி அவன்! அவனுடைய காலத்தில் அந்த போராட்டத்துக்கு அவசியமும் அர்த்தமும் இருந்தது;

இப்பொழுது...

http://www.youtube.com/watch?v=QvjaJk81ZC8&feature=related

0 comments: