(மறைந்த)தோழர் சில்க் ஸ்மிதா...!

பதிவின் தலைப்புக்கு தோழர் லக்கிலுக் காரணமாயிருக்கலாம் ஆனால் பதிவுக்கு அவர் காரணமல்ல...!

சில்க ஸ்மிதா இந்தப்பெயர் ( சிலுக்கு என்ற பெயர்தான்) தமிழ்நாட்டில் ஏற்படுத்திய அலை இன்னமும் ஓயவில்லை அது தமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வயது வித்தியாசமின்றி ஏற்படுத்திய தாக்கங்களை நான் சொல்லி தெரியவேண்டும் என்பதற்கல்ல!
விஜயலட்சுமி என்கிற இயற்பெரில் சாதாரண குடும்பத்தில் ஆந்திராவில் பிறந்து தமிழ் நாட்டைக் கலக்கிய கவர்சிப் புயல் 1996ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 23ம் திகதி சென்னையில் அவருடைய அப்பார்டமென்டில் தற்கொலை செய்து கொணடதாக சொல்லப்படுகிற சில்க் ஸ்மிதா தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத ஒருவர் என்பது மிகையல்ல.


அவரது எச்சில் பட்ட அப்பிளுக்கு தமிழ்நாடே காத்திருந்ததாக நான் குமுதம்,ஆனந்தவிகடன் களை வாசிக்கத்தொடங்கிய நாட்களின் ஆரம்பத்தில் படித்திருக்கிறேன். அந்த அளவுக்கு தோழர் சிலுக்கு தமிழ் சினிமா ரசிக நெஞ்சங்களில் குடியிருந்தார்.

அவர் பல மொழிகளில் பல படங்களில் பல வேடங்களில் நடித்திருந்தாலும் எனக்கு தெரிந்தவையும் குறிப்பிடத்தக்கவையும் என்றால் கோழி கூவுது, அலைகள் ஓய்வதில்லை, மூன்றாம்பிறை, ஸ்படிகம் இவைகள்தான்.

அவர் நடித்த படங்களை விட ஆடிய படங்கள்தான் அதிகம் என்பதுதான் உண்மை அவருக்கென்றே அமைத்தது போல நடனங்களும் அதற்கு அவர் கொடுக்கிற அசைவுகளும் அவருக்கே உரிய தனி ஸ்டைலில் இருக்கும். (பொன் மேனி உருகுதே) ஆனால் அவர் ஆடிய பாடல்களும் படங்களும் பல இருந்தாலும் எல்லோருக்கும் சட்டென்று நினைவுக்கு வருகிற தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ( தமிழகம் மட்டுமல்ல) ரகசியமாய் ஒலிக்க விடப்பட்ட பாடல் நேத்து ராத்திரி தூக்கம் போச்சுடிதான்...கமலும் சிலுக்கும் கலந்தாடிய அசைவுகளில் அந்தக்காலத்து தமிழ் சினிமாவே அசைந்திருந்தது, தமிழ்நாடே அதிர்ந்திருந்தது,ரஜினியின் சிவாஜி படத்தில் கூட இந்தப்பாடலைத்தான் எடுத்துக்காட்டியிருப்பார் ஷங்கர்.

பலருடைய தூக்கத்தை பறித்த பாடல் இது...!
நேத்து ராத்திரி...

1979 இல் வண்டிச்சக்கரம் படம் மூலம் சிலுக்கு என்ற பெரில் தமிழ் நாட்டை மகிழ்வித்த கறுப்பு கவாச்சி நடிகை தோழர் சில்க் ஸ்மிதா கடைசியில் தமிழ் நாட்டிலேயே தனது உயிரையும் பிரிந்திருந்தர் அவருடைய மரணமும் மறைவும் பல சர்ச்சைகளை கொண்டிருந்தாலும் அவர் பல இதயங்களில் இடம் பிடித்திருந்தார் என்பதும் அவசரது ரசிகர்களை அவர் ஒரு நாளும் ஏமாற்றியதுமில்லை என்பதும் அவருக்கு இன்றும் இருக்கும் ரசிகர்களின் மூலம் நாம் கண்டுகொள்ளலாம் । நடிக்கும் பொழுதும் சரி மறைந்த பிறகும் சரி சர்ச்சைகளோடேயே இருந்த சிலுக்கு தனது முப்பத்தைந்தாவது வயதில் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது .


எது எப்படி இருந்தாலும் தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க இயலாத ஒருவர் தோழர் சில்க் ஸ்மிதா...!

பி கு :

* தோழர் சிலுக்கு நடித்த 'தங்கத்தாமரை' என்கிற வெளிவராத படம்தான் அவர் கடைசியாக நடித்த படம் என்று சில தகவல்கள் சொல்கிறது அந்தப்படத்தின் இயக்குனரான திருப்பதிராஜா தோழர் சில்க் ஸ்மிதாவைப்பற்றி ஒரு சர்ச்சைக்குரிய புத்தகம் எழுதினார் என்று ஒரு தகவலும் இருக்கிறது ஆனால் அது பற்றிய விபரம எனக்கு தெரியவில்லை...

* சும்மா ஒரு மாறுதலுக்காக சிலுக்கு!

0 comments: