சிறப்பு உறுப்பினர் பாலகுமாரனும் நானும்...

முதல்ல என்ரை கண்ணுல பட்ட ஒரு செய்தி ....

விகாரமாதேவி கருவுற்றிருந்த போதும் தமிழின அழிப்பு வெறி இருந்தது: க.வே.பாலகுமாரன்
[புதன்கிழமை, 28 மே 2008, 03:21 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
துட்டகைமுனுவின் தாய் விகாரமாதேவி கருவுற்றிருந்த வேளையில் கூட தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற வெறி இருந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.
முறிகண்டியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் பலியெடுக்கப்பட்ட மக்களின் வணக்க நிகழ்வில் உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
2500 ஆண்டு காலமாக குருதி குடிக்கும் வெறியில் தமிழினத்தை சிங்களம் படுகொலை செய்கின்றது.
தமிழினத்தை அழிக்கும் வெறி சிங்கள மக்களிடம் உறைந்து போய் உள்ளது. துட்டகைமுனுவின் தாய் விகாரமாதேவி கருவுற்றிருந்த வேளையில் தமிழனின் பச்சைக்குருதியை குடிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது என்று அவர்களின் இதிகாசம் சொல்கின்றது.
தேசத்தின் இருப்பில் இந்தப் படுகொலைச் செய்தி இடிக்கு மேல் இடியாக வந்து சேர்ந்தது. பாரதிபுரத்திலும் மலையாளபுரத்திலும் காற்று ஆடவில்லை.
தமிழின அழிப்பு என்பது சிங்கள அரசின் வேர்களில் காலம் காலமாக உள்ளது. பெரும் புயல் காற்றில் விளக்குச்சுடர் அசைகின்ற மாதிரி நாம் அசைகின்றோம்.
இத்துயரத்தை அழுது கொட்டிய பின்னர் இந்தப் பெற்றோரை, உறவுகளை, இழந்தவர்கள் நாளைக்கு ஒளியாக மாறி பின் பொறியாக மாறுவார்கள். அவர்கள் தேசத்தின் விடுதலையை வென்றெடுக்க உதவுவார்கள்.
இந்த பசுந்தளிர்களை பக்குவமாக வளர்த்தெடுத்து சிங்கள அரசிற்கு தக்க பாடம் புகட்டவேண்டியது நமது கடமை என்றார்.

இப்ப நான் புலம்பின கதையள்...


என்ன 2500 வருசத்துக்கு மந்தியோ என்ன கொடுமையப்பா இது நான் 30 வருசத்துக்கு முந்தின கதையே வேண்டாம் எண்டு சொல்லுறன் இது என்னடாண்டால் 2500 வருசத்துக்கு முதலே இருந்ததாம்.. கொடுமையடா சாமி...

நாங்களும்தானே அங்கங்க குண்டுவச்சு பீதியைக்கிளப்புறம்; அதுக்கென்ன சொல்லுறியள் அடிக்க வராதையுங்கோ ஐயா நான் சின்னப்பெடியன் உண்மையா எனக்கு நல்ல சிங்கள நண்பர்கள் இருக்கிறார்கள் என்ரை நண்பர்களுக்கு ஒரு கவலையெண்டால் அது எனக்கும்தானே நீங்களே சொல்லுங்கோ உங்கடை ஆக்களுக்கு ஒரு கவலை எண்டால் அது உங்களையும் கஸ்டபபடுத்தும்தானே... நல்ல சந்தோசமான வாழ்க்கை வாழத்தானே அழுது கொண்டு பிறக்கிறம்...

தேவையில்லாம நாட்டுக்குள்ள நடக்கிற பதிலுக்கு பதில் பிரச்சனைகளால நல்லதொரு இளைய சமுதாயம் நாசமாப்போகுது மஹிந்தவும் சொல்லுக்கேக்க மாட்டார் அந்தப்பக்ம் இருக்கிற ஆக்களும் அப்பிடித்தான் அதாலை நீங்கள் ஆரையாவது இல்லாமப்பண்ணோணும் எண்டால் யுத்தத்தையும் உந்த கேவலமான அரசியல்வாதிகளையும் இல்லாமப்பண்ணுங்கோ அதுக்கு நானும் வாறன்....

ஏனிந்த கொலை வெறி உங்களுக்கு 2000 ம் ஆண்டு பிறந்த எந்தக்குழந்தைக்கு தெரியும் யுத்தமும் இனப்பிரச்சனையும் அதுகளுக்கெல்லாம் ஏனிந்த கொடுமை...

பேசுறதுக்கு ஒரு மேடைகிடைச்சாப்போதுமே உப்பிடித்தான் நடேசண்ணனும் கடுகு சஞ்சிகை வெளியீட்டுல பேசினார் அவர் பேசினதுலயும் உப்பிடித்தான் பெடியளுக்கு படிப்பு வேணும் கல்வி வசதிகள் வேணும் அப்படி இப்படி என எல்லாம் சொன்னார் ஆனால் அதுக்கான சூழலைப்பற்றி ஒண்டும் சொல்லையில்லை வன்னிக்க இருக்குற பெடியளுக்க படிக்க மனம் வருமே நீங்களே சொல்லுங்கோ படிக்கிற பெடியளுக்கு "படி" எண்டு கூட தேவையில்லாம சொல்லக்கூடாதாம் ஆனா பெடியள் படிக்குதுகளோ இல்லையோ அதுகளுக்கு கட்டாயம் துவக்குப்பிடிக்கதெரிய வேணும், அது, இது எண்டு பல பிரச்சனைகள் பிள்ளை எப்படிப்படிக்கும்...

பழைய கதையளை பேசாதையுங்கோ அண்ணன்...

2500 வருசத்துக்கு முன்னமே அழிக்க நினைச்சால் இந்தளவுக்கு அழிஞ்சிருக்கோணும் அந்த அந்த பழைய கதைகளெல்லாம எதுக்கு ஐயா எங்களுக்கு நாங்க இப்பத்தான் பிறந்திருக்கோம் இன்னும் எவ்வளவு நாளைக்கு வாழ்வோம் சொல்ல முடியாதே ... அதனால விட்டுடுங்க வாழ்ந்துட்டுப்போறோம்

இது நான் மட்டும் சொல்லுற கதையில்ல நிறைய சகோதர மொழி நண்பர்களும் இதைத்தான் சொல்லுகினம். இளைய சமுதாயம் புரிந்துணர்வோடு இருக்கிறது சோத்துக்கும் பணத்துக்கும் கும்பிடு போடுற சில மோடையர் கூட்டம்தான் யுத்தத்தை தூண்டுகிறது மக்கள் துணிந்துவிட்டால் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள்...


நீங்கள் இப்பிடிச்சொல்லுறியள் வன்னிக்கை இருக்கிற சனம் என்ன சொல்லுதண்ணன் மிச்சமிருக்கிற வாழ்க்கையை என்ன செய்யுறதெண்டு யோசிக்குது அப்பிடித்தானே...

கொஞ்சம் பொறுங்கோ அடுத்த பதிவில எங்கடை மஹிந்த மாத்தையா என்ன சொல்லுறார் எண்டு பாப்பம் அது இதைவிட பெரிய கொடுமையா இருக்கும் போல...