நான் தசாவதாரத்தை எழுதப்போதில்லை...

தசாவதாரம் தசாவதாரம் தசாவதாரம் எங்கு பார்த்தாலும் தசாவதாரம் முறையாக படத்தை பாத்தவங்க எழுதினாலும் பரவாயில்லை சும்மா ஒரு தகவல் சொல்கிற பதிவு போட்டவங்க கூட தசாவதாரத்தோட சம்பந்தப்படுத்தி தலைப்பு வச்சு போட்டிருக்கினம்.படம் பார்த்தவர்கள், பார்க்காதவார்கள், படம் பார்க்கப்போய் பாக்க முடியாமல் வந்தவர்கள்,படம் பார்த்து நொந்தவர்கள் என்று பலதரப்பட்ட திறமை சாலிகளும் பதிவு போட்டிருந்தினம்.பதிவுகளை படிச்சதிலயே படத்தை ரசிக்க முடியாமல் போய்விட்டது படம் பாக்கப் பாக்க பதிவுகளின்ரை தலைப்புகள் வந்து பயமறுத்திக்கொண்டே இருந்தது கடைசியில கிடைச்ச மட்டமான குறுந்தகடும் விமர்சனங்களும் சேர்ந்து படத்தை பைத்தியக்காரனின் தசாவதாரம் பதிவின் தலைப்பு மாதிரி ஆக்கிவிட்டது. http://naayakan.blogspot.com/2008/06/blog-post.htm(பதிவுக்கான தொடுப்பு இது)

ஒரு படம் எடுத்திருக்கினம் அதுக்கு கொஞ்சம் ஓவரா பில்டப் குடுத்திட்டினம் அது சரி அதுக்காக அதை கிழிச்சு தொங்கவிட்டா எப்படி...சினிமாவில இதெல்லாம் சகஜமப்பா ...

"இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாய்க்கிப்புட்டாய்ங்கடா" எண்டு வடிவேலு சொல்லுறது மாதிரி உலக நாயகன் உலகத்தரம் என்று சொல்லிச் சொல்லியே படத்தை பற்றிய எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியதும் இந்த எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஒரு காரணமாகலாம்... தேவயில்லாதது பத்து வேடங்கள் அவசியமற்ற பாத்திரப்படைப்புகள் என்று கமல் இந்தப்படத்தில் தன் சுயத்தை இழந்திருப்பது தெரிகிறது...

மற்ற படி இந்த வைணவர் - சைவர் கமல்; கடவுள் இருக்கிறாரென்கிறாரா இல்லையென்கிறாரா அல்லது கடவுள் வேணுமென்கிறாரா என்கிற நுண்ணரசியலெல்லாம் எனக்கு தெரியாதப்பா...

கமல் நல்ல கலைஞன் என்பதில் எனக்கு உடன்பாடு இருக்கிறது...நல்ல உடல் மொழியும் இயல்பான நடிப்பும் அவருக்கு வாய்த்திருக்கிறது..ஆனால் தசாவதாரம் போன்ற படங்களை விட சாதாரணமான உணர்வுகளை சொல்கிற படங்களில் அவரால் நிறைய ஜொலிக்க முடியும் என்பது என்கருத்து...

இது என்ன கரைச்சலப்பா தசாவதாரத்தை எழுதப்போவதில்லை எண்டு சொல்லிப்போட்டு அதைத்தானே எழுதிக்கொண்டிருக்கிறியள் எண்ட சலிப்புகளுக்கு முன்னால் கமலை நான் ரசித்த ஒரு படத்திலிருந்து...ஒரு காட்சியோடு பதிவை நிறைவுசெய்கிறேன்...

http://www.youtube.com/watch?v=6c_y0_fSPp0

படத்தின் காடசியை பதிவிலேயே காடசிப்படுத்தினால் சுவாரஸ்யம் இருக்காது அதனால் பதிவுக்கான தொடுப்பு மட்டும் கொடுத்திருக்கிறேன் (பொறுமை பொறுமை) பாத்துக்குங்க..

பின்குறிப்பு: நான் இன்னமும் படம் பார்க்கவில்லை...

0 comments: