ஒரு கிலோ அரிசி 130 ரூபா, சடலங்கள் மீட்பு...

யாழ்ப்பாணத்துல இருக்கிற பிள்ளையளுக்கு சாப்பிட வழியில்லை படிக்கவும் வழியல்லை இருந்தாலும் எங்கடை பிள்ளையள் படிப்பை கைவிடுறதில்லை எண்டுறதிலை எனக்கு தனிப்பட்ட பெருமை இருக்கு விளக்கு கொழுத்து மண்ணெண்ணை இல்லையெண்டாலும் படிச்சு கம்பஸ் போற பிள்ளையள் எங்கடை பிள்ளையள் ஆனா இண்டைக்கு இருக்கிற நிலமையைப்பாத்தா பயமாயிருக்கு நாட்டில சனமில்லை இருக்கிற சனத்துக்கு வாழ வழியில்லை! என்ன செய்யுறது...பின்ன என்னத்தை நான் சொல்ல ஒரு கிலோ அரிசி 130 ரூபா எண்டால் மற்ற தேவையான சாமான்களின்ரை விலையை கேக்க வேணுமோ...?விலைவாசியை கவனிக்கிறதுக்கெண்டு இருக்கிற ஆக்களும் ஒருத்தரும் கடைமையில இல்லையாம் பாவம் அவையளுக்கு எத்தினை கஷ்டமோ? கப்பல்ல வாற கொஞ்ச சாமான்கள் தான் எல்லா தேவைக்கும் எண்டால் என்ன செய்யுறது யாழ்ப்பாணம்??? ஆரோ சொன்ன மாதிரி யாழ்ப்பாணத்தல இருக்கிற சனம் எல்லாம் மன உளைச்சலால பாதிக்கப்பட்டிருக்காம் பொறுத்துக்கொள்ளுங்கோ தாகம் தீரேக்க இருக்கிற மிச்சம் சொச்சம் சனமும் என்னநிலமைக்கு வந்துடுமோ ஆருக்கு தெரியும்...!?


***
அவைத்தலைவராம் அது யாரை அவைத்தலைவர் எண்டு சொல்லுறதெண்டு எனக்கு தெரியாது ஆனா அவற்றை பெயர் நிமால் சிறீ பால டி சில்வா எண்டு சொல்லிச்சினை அவரென்ன சொல்லியிருக்கிறார் எண்டால் இலங்கையில மட்டுமில்லையாம் உலகம் முழுக்க இதுதானாம் நடக்குதெண்டு உலகம் முழுக்க உதே நடக்குகுது நான் தெரியமத்தான் கேக்குறன் எந்த ஊரிலை நடக்குது இந்த மாதிரி கேவலமான பொருளாதாரத்தோட தேவையில்லாத ஒரு பிரச்சனை...

***
நாட்டில சாப்பிட வழியில்லை, நிம்மதியா இருக்க வழியில்லை இந்த கேட்டுக்குள்ள அவையின்ர தரப்பில இந்தனைபேர் பலி, இவையின்ர தரப்பில இத்தனைபேர் பலி, பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்று, காவலரண்கள் சேதப்படத்தப்பட்டது, எண்டு பெருமையான செய்திகள் வேறை-அதுக்கு மாறி மாறி மறுப்பறிக்கைளும் என்ன கொடுமையப்பா இது!. போதாக்குறைக்கு அந்த பஸ்ஸில குண்டு வெடிப்பு, இந்த கடையில குண்டு வெடிப்பு, அந்த இடத்தில குண்டுத்தாக்குதல், இந்த இடத்தில இத்தனைபேர் பலி எண்டும் அதுக்கு போட்டியா இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொலைகளும், ஆள் கடத்தல்களும், சடலங்கள் மீட்பும் எண்டு எந்தப்பத்திரிகையை பாத்தாலும் நாட்டின்ரை பெருமை சொல்கிற செய்திகள் தானே வருகுது மற்ற நாடுகளைப்போல; இதிலை விலைவாசி கூடினா நாட்டுக்கொண்டும் குறையப்போறல்லை தானே...?

0 comments: