பிரிய தர்ஷினியும் குருவியும்...

பிரிய தர்ஷினியும் குருவியும்... இவளை என்னவென்று சொல்ல...

"இந்த காலத்து இளைஞர்கள் என்ன மாதிரி சமுக சிந்தனையோட நாட்டுக்காக செயல்படணுங்கிற உயர்ந்த கருத்தோட குடும்பத்தையும் தகப்பனையும் காப்பாற்றுதல், நாட்டை சமூக துரோகிகளிடம இருந்து காப்பாற்றுதல், காதலியை காப்பாற்றி குடும்பத்தோடு சேருதல்ங்கிற முப்பரிமாண கதாபாத்திரத்தில விஜய் சிறப்பாக நடடிச்சிருக்கிற படம்தான் குருவி" இந்த கருத்தை நான் சொன்னதுன்னு தப்பா எடுத்துக்காதிங்க,இது நம்ம கலைஞர் ரிவி படவரிசை படத்துல பிரிய தர்ஷினி சொன்னது...

பிரிய தர்ஷினிக்காக சில நேரங்களில் நான் பார்க்கிற நிகழ்ச்சிகளில் கலைஞர் ரிவி படவரிசை பத்தும் ஒன்று. நேற்று எதேச்சையாக "நைட் டியுட்டி" முடிஞ்சு அறைக்கு வந்து ரிவியை போட்டால் நிகழ்ச்சி போய்கொண்டிருக்கு வேலை முடிந்து வந்து செய்கிற வழைமையான காரியங்களை கவனித்துக்கொண்டே பிரிய தர்ஷனியை... மன்னிச்சுங்குங்க நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தேன், அப்ப இரண்டாவது இடத்துல இருக்கிறது நம்ம குருவி படமென்று ஏற்கனவே தெரிஞ்சாலும் அதுக்கு பிரிய தர்ஷனி சொன்ன கருத்து இருக்கே நான் அப்படியே கடகடகன்னு சிரிச்சசிட்டேன். அந்தப்பொண்ணு வார்தைகனைள நல்லா உச்சரிக்கும்றதுக்காக எதை வேணும்னாலும் எழுதிக் கொடுத்திடுவிங்களா மக்காள்; என்னைய இப்படி சிந்திக்க வச்சிட்டிங்களே? அது என்னண்ணே முப்பரிமாண கதாபாத்திரம்? அப்ப தசாவதாரம் எத்தைனை பரிமாணம்ணே... சரி சிரிச்சதுல என்ன தப்புங்கறிங்களா நல்ல வேளை நான் மட்டும்தான் அறையில இருந்தேன் அறை நண்பன் இருந்திருந்தான்னா என்னாச்சோ ஏதாச்சோன்னு பயந்திருப்பான் வீட்டுக்கு பண்ணி சொன்னாலும் சொல்லியிருப்பான் ஏனெண்டா சமீப காலமா தமிழ் மணம் தவிர வேற காரியமே கிடையாது எனக்கு,அதில்லை அப்படின்னா நேரங்களில்றூமிலதான் இருப்பேன் றூமில இருக்கிறப்போ... றூம்மேட்ஸ் கலைஞர் ரிவிதான் அதிலையும் வைர செஞ்சம் நம்ம குடும்பம்னு போட்டு என்னோட பிறசரை கூட்டுறதுல என்ன சந்தோசமோ தெரியலை இந்த சீரியல் காரங்களுக்கு, கலைஞர் ரிவியை போட்டு பாக்கிற நிகழ்ச்சிகளை பாத்தால் கொலைவெறிதான் வரும் திட்டிதீர்த்திடுவேன்,சில என்னையும் அறியாமல் சிரிப்பு வந்திடும் இதைப்பாத்த்து பாத்து அவங்கள் எனக்கு ஏதோ நடந்திடிச்சு என்று நினைச்சதுல தப்பில்லைதானே......அடிக்கடி எனக்கும் அறை நண்பர்களுக்கும் சண்டையெல்லாம் கூட வந்திருக்கு பின்ன தாங்க முடியாம நான் ரிவி பண்ணினா சும்மா இருப்பாங்களா ஆனா அதுவும ஒரு சுவாரஸ்யமான தருணங்கள்தான்...

இதை விட கொடுமை என்னன்னு கேட்டிங்கன்னா!

தங்கச்சி வந்து அக்காவை நல்லா இருக்க விட மாட்டேன்னு பொருமுறதும், அக்கா வந்து நான் மாமனார் பேருல வியாபாரம் தொடங்கறேன் நீங்கல்லாம் ஆதரவு தருவிங்கன்னு நம்புறோம்னு நம்ம தலையில மிளாகாய் அரைக்கப் போறோம்னுறதை வேற மாதிரி சொல்லுறதும் என்ன கொடுமையப்பா இது தமிழ் நாடே இப்படித்தான் இருக்கா அல்லது???? இந்த ஸீரியல் பாக்கிற பெண்களுடைய மனநிலை எப்படி இருக்குங்கிறத வச்சு ஒரு ஆராய்ச்சி பண்ணினா நல்லா இருக்ம்னு நினைக்கிறேன்(வெள்ளைக்காரன் எது எதுக்கோல்லாம் ஆராய்ச்சி பண்ணும்போது...)அதுக்கப்புறம் மெகா ஸீரியலை தடைசெஞ்சாலும் செஞ்சுருவாங்க பின்ன என்னங்க நல்லவங்க எப்பவுமே சோப்பிணாங்கி மாதிரி அழுதுகிட்டே இருப்பாங்களாம் கெட்டவங்க செய்யுறதெல்லாம் செய்து சந்தோசமா வாந்துட்டு வாழந்து முடியுற நாட்களில வந்து (அப்புறம் சீரியல் முடிய அவ்வளவு நாள் ஆகாதா) மன்னிப்பு கேட்க நல்லவுங்க பெருந்தன்மையா மன்னிச்சுருவாங்களாம் அப்படின்னா நல்லவங்களுக்கு வாழ்க்கை இப்படித்தான் இருக்குமா...?

அது மட்டுமில்லை இப்பல்லாம் பழைய படங்கள்ள இருந்து எடுத்து அங்கங்க சிச்சுவேசன் சாங் போடுறாங்கப்பா சீரியல்ல அதை விடுங்கோ பரவாயில்லை.. கடைசியா என் கண்ணுல பட்ட சீரியல் எபிஸோட்டோட முடிவில சொத்தெல்லாம் எழுதிக்கொடுத்துட்டு பிரிஞ்சு போய் வியாபாரம் பண்ண இருக்ககிற அக்கா வோட பாங்க் லோனை தடுக்கிறதுக்காக பாங்க் போய் குழப்பிட்டு வந்து அவளை நடு ரோட்டுல கஷ்டப்பட வைக்கணும்னு சொல்லுவா அந்த ஸீனோட தொடரும் போடுவாங்கன்னு பாத்தா தங்கச்சியோட முகத்தை திரையில விட்டுட்டு...
இவளை என்னவென்று சொல்ல ...?

அப்படின்னு முடிப்பாரு டைரைக்டர் சிகாமணி, அடப்பாவிகளா பிழைப்புக்காக இந்த மாதிரி சீரியல் எடுக்கிற

உங்களை என்னவென்று சொல்ல...?

0 comments: