என்ன எழுதுவது...

என்ன எழுதுவது என்று யோசிக்கையில் மனதிற்குள் அடுக்கடுக்காக பல விடயங்கள் வருவதும் அவை ஒவ்வொன்றாய் பெருகுவதும் பின் விலகுவதும் சேர்வதுமாக நிறைய எழுதலாம் போல இருக்கும் ஆனால் எழுத வேண்டும் என்று வந்து அமர்கையில் எதுவுமே வருவதில்லை எழுதுகிற ஆற்றல் அவ்வளவுதானோ அல்லது அவை எழுத்தில் அடங்காதவையோ என் சிற்றறிவுக்கு நான் நினைப்பவற்றை தொகுக்கக்கூட முடிவதில்லை தொடர்பற்றதாகிய காடசிகளுடனானதொரு பெருங்கனவைப்போல என் மனதில் அவை கோர்வையாக இல்லாமையும் ஒரு காரணமாகலாம் என்பதோடு எழுதுவாதற்கான சூழல் எனக்கு வாய்க்காமல்தானிருக்கிறது।

நான் இருக்கும் இடத்தில் கடிதம் வராதவர்கள் கூட இருக்கிறார்கள் ஆனால் அவார்கள் பிழைக்கத்தெரிந்த புத்திசாலிகள், ஏமாற்றத்தெரிந்த நல்லவர்கள், உணர்வுகளை வேடிக்கை பார்ப்வர்கள் என அவர்களிடம் இருக்கிற பணம் என்கிற வியாதிக்கு வைத்திய வல்லுனர்கள் அதனை தவிர்ப்போம்.

ஒரு குமுதம் கிடைப்பதே அரிது அதிலும் படங்கள் பார்ப்பவர்களே என்னைச்சூழ இருக்கிறார்கள அவர்களுக்கு மத்தியில் நான்கு பலகைச்சுவர்களுக்கு நடுவில் நான் வாசிப்பதே பெருவிடயம் ஆனாலும் நான் இவ்வளவு நாட்கள் இங்கிருப்பதே வாசிப்பதாலும் சுவாசிப்பதாலும் என்றாலும் அது மிகையானதல்ல என்பது என் எண்ணம்.என்னுடைய படுக்கையில் எப்பொழுதும் ஏதாவது கட்டுரைகள் கவிதைகள் என்று வாசிப்பதற்கும் நான் கிறுக்கியவை குறித்தவை எழுதுவதற்குரிய தாள்கள என்று அவை இல்லாவிட்டால் எனக்கு தூக்கமே வருவதில்லை...

இந்நிலையில் இலங்கையின் பலர் இப்பொழுது வலைப்பதிவில் எழுதுவது மகிழ்ச்சி தரும் விடயம் அத்தோடு இலங்கையின் பத்திரிகைகள் வலைப்பதிவுகளை கவனிக்க ஆரம்பித்திருப்பதும் வரவேற்கத்தக்க விடயம்... ஆனாலும் இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியானதொரு இறுக்கமான சூழலில் எழுதிக்கொண்டிருப்பது வலைப்பதிவில் எழுதுவதே நாம் நாமாக வெளிப்பட வேண்டும் என்பதற்காகத்தான் என்பது என் கருத்து (கவனிக்கவும்) என் முகத்தை காட்டுவதைவிட மனதையும் சிந்தனை வெளிப்பாடுகளையும் காட்டுவது நன்றென்று நம்புகிறேன், நான் யார் என்பது முக்கியமல்ல அல்லது கூறுவது யார் என் பது முக்கியமல்ல என்ன கூறுகிறார் என்பதுதான் கவனத்திற்குரியது அப்படித்தானே (அதற்காக நான் ஓன்றும் சமுக எழுத்தளன் அல்ல ஏதொ ஒரு சந்தோசத்திற்காக என்னுடைய கருத்துக்களையும் பதிய வந்தவன் மட்டுமே நான் கதைப்பதை கேட்பதற்க யாரும் இல்லாத காரணத்தில் எழுத வந்தவன்)

இந்த நிலையில் கடல்கடந்து வாழும் இலங்கைத்தமிழர் மனதில் என்ன இருக்கிறது அவர்களது நோக்கம் அல்லது தமது இருப்பு மற்றும் அதற்கான ஆதாரம் என அவர்கள் கருதுவது என்ன? வலை பதியும் நண்பர்களுக்கு நீங்கள ஏதோ கணினிக்கு முன்னால் இருந்து எழுதக்கூடிய சூழல் கிடைக்குமளவிற்கு இருக்கிறீர்கள் ஆனால் எத்தனையோ சகோதரங்கள் தங்களது அடுத்த நாள் பற்றிய தேடல்களிலேயே தொலைந்து கொண்டிருக்கிறார்கள...இலங்கையின் இன்றய காலகட்டத்தில் பெரும்பாலானோர் கணிசமான மன உழைச்சல்களோடுதான் நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை வீட்டை விட்டு வெளியே வருகையில் உங்களை கடந்து போகிறவாகளிடம் அவர் என்ன மொழிபேசுபவராக இருந்தாலும் பரவாயில்லை எப்படி இருக்கிறீர்கள் என்கிற கேள்வியை மனதார கேட்டுப்பாருங்கள் அவர்களுடைய பதிலையும் கவனித்துக்கொள்ளுங்கள...யாராவது ஒருவர் முழுமனதோடு வாழ்ககை நன்றாக இருக்கிறது என்று சொல்கிறாராவென...ஏன் ஏனிந்த வாழாத வாழ்க்கை...

நாம் பொதுவாக வாழ்வதே கிடையாது ஓடி ஒடிக்களைத்து ஒரு புள்ளியில் நின்று திரும்பி பார்க்கையில் நல்ல நினைவுகள் என்று மீதமிருப்பவை ஒரு சிலதான் ஆனால் இன்னமும் நிறைவேறாமல் நிறைய இருக்கும்। நிறைவேற்றக்கூடிய தேவைகளாயிருந்தாலும் நிர்ப்பந்தங்களால் அவை கிடப்பில் இருக்கலாம் அல்லது நீங்கிப்போயிருக்கலாம் அல்லது அது முடிந்து விட்டது இனி எதற்கு என்பதாக ஆகியிருக்கலாம். ம்ம்ம்... அட அதற்கிடையில் இத்தனை வருடங்கள் ஒடிவிட்டதே என்று நீளமானதொரு ஏக்கப்பெருமூச்சுதான் வெளிப்படுகிறதுஅதன்பிறகு கொஞ்சம் நமக்காக வாழலாம் என்று ஆரம்பிக்கையிலேயே முடிந்து விடுகிறது வாழ்ககை.....

எல்லோரும் வாழ்வுக்கான தேடலிலேயே நம் காலத்தை கடந்து விடுகிறோம் சரி தேடல்தானே வாழ்க்கை சரிதான் நாம் எதற்காக எதை தேடுகிறோம் எங்கே போய்ககொண்டிருக்கிறோம் எங்கே தேடுகிறோம் என்பது தெரியாமலே ஓடிக்களைத்து ஓய்ந்து விடுகிறோம் வீண் விதண்டாவாதங்களில் தொலைந்து விடுகிறோம் வாழவேண்டிய தருணங்களை இழந்து விடுகிறோம் (இங்கே நானொன்றும் ஆன்மீகமோ தத்துவமோ பேசவில்லை அந்த அளவுக்கு நான் தெரிந்தவுனுமல்ல)

எதற்காக இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம் வெறும் விதண்டாவாதமும் பிடிவாதங்களும் மட்டுமே வெறும் அரசியல் இப்பொழுது இதை வாசிக்கையில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் இதற்கு முன்பாக என்ன செய்தீர்கள் இதற்கு பின்பாக என்ன செய்யப்போகிறீர்கள் இன்றய நாள் எப்படிக்கழிந்தது எல்லாவற்றையும் மனச்சாட்சியோடு யோசியுங்கள் நீங்கள் உங்களுக்கான வாழ்க்கையை வாழ யத்தனத்துடன் முயன்றிருப்பது தெரியும் பிறகென்ன அதைத்தானே நானும் சொல்கிறேன் அதையே முழுமையாக வாழ்வோம்...

எங்கேயோ தொடங்கி எங்கேயோ கொணர்ந்து நிறுத்தியிருக்கிறேன் இதை இந்த இடத்தில் முடிக்காமல் நிறுத்துகிறேன் இன்னொரு பதிவில் தொடரலாம்(இதையே தாங்க முடியவில்லை இன்னொரு பதிவா முடியல...)

2 comments:

said...
This comment has been removed by the author.
Anonymous said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது
நானும் தற்காலிகமாக வெளிநாட்டில் வசிக்கிறேன் எனது கல்வி சம்பந்தமான ஆராய்ச்சிகளுக்காக.

வெளிநாட்டில் நல்ல புத்தகங்கள் வாசிக்கக் கிடைப்பது தான் மிகப் பெரிய விசயம்.

குமுதம் ஒன்லைனிலேயே படிக்கலாம்
(WWW.KUMUDAM.COM)
உங்களுக்கு ஏற்கனவேதெரிந்திருக்கலாம்.

மீண்டும் சந்திக்கும்வரை ,
தபோதரன், உப்சாலா, ஸ்வீலடன்