ஏமாற்றம்...

அது பொறளையில் இருக்கும் ஒரு ஏஜென்சி சவுதிக்கு ஆட்களை அனுப்புவதில் பெயர்பெற்றது(எந்தமாதிரி) ஆனாலும் இப்பொழுது நாட்டில் இருக்கிற சூழ்நிலையையும் வருபவர்களின் அறியாமையையும் அவர்களது நிலமையையும் பயன்படுத்தி முடிந்தவரை அவர்களிடம் பணம்பார்த்துவிடுகிறது பணம்பார்ப்பது குற்றம் அல்லது அது குற்றம் அல்ல என்று நான் சொல்ல வரவில்லை, ஆனால் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு ஒளவு தொகை எதற்காக அதுவும் கிடைக்கப்போகிற சம்பளத்திற்கும் விசா செலவுக்கும் எம்பந்தமும் கிடையாது, அத்தனைக்கும் அந்த சவுதி கம்பனி நம்ம ஏஜென்சிக்கு விசாவை மிகச்சிறிய தொகைக்கே கொடுக்கிறது என்பது நம்பகமான இடத்தில் இருந்து வந்த தகவல். போதாக்குறைக்கு நம்ம ஊர்ல காடடுற சம்பளம் சிலருக்கு சவுதி வந்ததும் குறைக்கப்படுகிறது எத்காக இப்படி நீங்கள்தான் காசு பார்க்கிறீர்கள் அல்லவா பிறகேன் அவர்களது சம்பளத்திலும் கை வைக்கிறீர்கள். சரி ஏஜென்சிக்கு இவ்வளவு என்றால் இடையில் பயிற்சி சான்றிதழ் என்று ஒரு பத்து நாளுக்குள் 10000, 20000 ,15000 என கிடைக்கிற தொகையை சுருட்டிக்கொள்கிறார்கள் அதிலும் பங்கு வேறு ஏன் ஏனிந்த வெறி காசிருக்கிறவன் உங்களிட்டை வரமாட்டான் நினைவில் வைக்கவும். இப்படி பெரிய தொகையை அநியாயமாக கொடுத்து வருவதாலும் குடும்ப சூழலாலும் சவுதியில என்ன கஷ்டம் இருந்தாலும் மனதிற்குள்ளேயே புழுங்கி மனதளவில் பலவீனமாகிவிடுகிறார்கள் பலர். இதில் ஏஜென்சியை மட்டும் குறை சொல்ல முடியாது ஏற்கனவே அனுபவம் உள்ள சிலரும் தேவைக்கதிகமான காசை முதலிலேயே கொடுத்து விட்டு பிறகு காசை திரும்ப பெறமுடியாமலும் ஊர்ல இருந்து என்ன செய்வது என்கிற நிலமையிலும் வீட்டு சூழ்நிலைகளினாலும் சவுதிக்கு வந்து சேர்ந்து விடுகிறார்கள் வந்தால் வாழ்க்கையும் கிடையாது திரும்ப போகையில் மிச்சமும் கிடையாது இதுக்கெல்லாம் நல்ல வழி என்ன நாட்டில இருக்கக் கூடிய தொழில் செய்யக்கூடிய ஒரு நிலமை இருந்தால் இலங்கையில் பிழைப்பதற்கு நிறைய வழிகள் இருக்கிறது அதற்கு முதல் தேவை தனி மனிதர்களுக்கிடையிலான புரிந்துணர்வு மடடுமே அது இருந்தால் ஜனாதிபதியும் வேண்டாம் தலைவரும் வேண்டாம் அரசும் வேண்டாம் அரசியலும் வேண்டாம் நாம் வாழலாம் ...

0 comments: