ஒரு சின்ன கவிதையும் பெரிய பொருளும்...

எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்று இந்தக் கவிதையை தந்து போயிருந்தது யாரோ ஒரு தென்னாபிரிக்கா சிறுமி ஒருத்தி எழுதியதாகவும் அது 2006 ம் ஆண்டின் சிறந்த கவிதை கவிதையாக UN அமைப்பின் தேர்வாக அறிவிக்கப்பட்டதாகவும் தகவல் சொல்லியிருந்தது...

வாசித்துப்பாருங்கள்;

When I born, I black
When I grow up, I black
When I go in Sun, I black
When I scared, I black
When I sick, I black And
when I die, I still black

And you white fellow
When you born, you pink
When you grow up, you white
When you go in sun, you red
When you cold, you blue
When you scared, you yellow
When you sick, you green And
when you die, you gray And
you calling me colored??

எவ்வளவுதான் உலகம் ஒரு முகப்படுத்தப்பட்டாலும், இன்னமும் மனிதன் மறக்கவும் தவிர்க்கவும் வேண்டிய பல விடயங்கள் இருக்கத்தான் செய்கிறது... ஒரு சின்ன குழந்தையின் கவிதை சொல்லிப்போகிற விடயம் மிகப்பெரியதாகவிருக்கிறது.

அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிறது...

இந்தப்பிரச்சனை சக மனிதனை தங்களில் ஒருவனாக பாவனை செய்வதற்கு பலருக்கு முடிவதில்லை... நிறம், மதம், மொழி, தொழில், அந்தஸ்து, என்ற பல காரணிகளால் ஒருவரை ஒருவர் ; மற்றவரிலிருந்து பிரித்துக்கொள்கிறோம் தேவையற்றதாகிய தன்முனைப்புகளில் அடுத்தவருக்கும் நமக்கும் சங்கடங்களை ஏற்படுத்திக்கொள்கிறோம்.

இலங்கையில் இருப்பதும் இதுதான் ஒரு நாள் மட்டும் இந்த பிரச்சனைகள் எல்லாம் மறந்து இலங்கையர்களாக வாழ்ந்து பார்ப்போம் என்ன நிகழ்கிறதென்று அதன் பிறகு பாருங்கள் ஒரு நாள் முதல்வன் போல இந்த ஒரு நாளில் இலங்கை எவ்வளவு மாறிப்போகிறதென்று...



என்ன ஒரு நாளுக்கான அனுமதியை யார் தருவார் என்று யோசிக்கிறீர்களா... இதுதான் இந்த தயக்கம்தான் இலங்கை இப்படி இருப்பதற்கு காரணம் மனதில் ஆசையிருந்தாலும், விருப்பமும், சந்தோசமும் இருந்தாலும் மற்றயவர்களோடு பழகுவதில் காட்டுகிற தயக்கமும், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத அந்த சூழல்தான் அடிப்படையே॥ மனதில் இருவருக்குமே ஆசையும் காதலும் இருந்தாலும் நாட்டின் நிலமையால் உள்ளுக்குள் அழுதுபிரிந்த காதல் பலதை நான் பார்த்திருக்கிறேன்...


தயாராகுங்கள்... உண்மையாக வாழ்வதற்கு மாற்றிக்காட்டுவோம் இலங்கையை புதியதாக.பழையன கழிவதும், புதியன புகுவதும்... உலக இயல்பு நாம் மட்டும் ஏன் இன்னமும் முப்பது வருடம் பழைய பகையை; சில சுயநல வாதிகளிற்காகவும், தவிர்க்க முடியாமலும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்...


மாறுவோம் நண்பர்களே! அன்பென்ற ஆயுதம் இருக்கிறது நம்மிடம்.

4 comments:

said...

//
மாறுவோம் நண்பர்களே! அன்பென்ற ஆயுதம் இருக்கிறது நம்மிடம்.//

கவிதையை சுட்டிக்காட்டியதற்க்கு நன்றிகள்:)

said...

உண்மையில் சாதாரண சிந்தனைக்கு ஆட்படாத எண்ணத்தை கவிதைக்குள் அடக்கியிருக்கிறாள் சிறுமி. எவ்வளவு பெரிய அர்த்தத்தை அது அடைகாத்துக்கொண்டிருக்கிறது? பதிவிட்டடைக்கு நன்றிகள்.

//மாறுவோம் நண்பர்களே! அன்பென்ற ஆயுதம் இருக்கிறது நம்மிடம்.//

நிச்சயமாக!!!

said...

\\\//
மாறுவோம் நண்பர்களே! அன்பென்ற ஆயுதம் இருக்கிறது நம்மிடம்.//

கவிதையை சுட்டிக்காட்டியதற்க்கு நன்றிகள்:)\\\\

ரசிகன் நீங்கள் என் பதிவுகளுக்கு வந்ததில் மகிழ்ச்சி அதெப்பிடி ரசிகன் அங்க இங்க அது இது என்று எல்லாவற்றையும் எழுத முடிகிறது... உங்களுக்கு...

நன்றி ரசிகன்...அடிக்கடி வாங்க...

said...

///உண்மையில் சாதாரண சிந்தனைக்கு ஆட்படாத எண்ணத்தை கவிதைக்குள் அடக்கியிருக்கிறாள் சிறுமி. எவ்வளவு பெரிய அர்த்தத்தை அது அடைகாத்துக்கொண்டிருக்கிறது? பதிவிட்டடைக்கு நன்றிகள்.

//மாறுவோம் நண்பர்களே! அன்பென்ற ஆயுதம் இருக்கிறது நம்மிடம்.//

நிச்சயமாக!!!///


வாங்கோ நிர்ஷன் என்ன வேண்டுமானாலும் கதைக்கலாம்...
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...