மதியம் வியாழன், ஏப்ரல் 17, 2008

வீணாகிப்போன இரண்டு தலைமுறைகள்...

வ-வா-ச போட்டி என்று ஒன்று நடப்பதாக சொல்லியிருந்தார்கள் பல இடங்களில் அதற்கான ஆக்கங்களையும் பார்க்க முடிந்தது...சரி நானும் ஏதாவது எழுதலாம் என்று யோசிக்கையில் என்னுடைய பாழாப்போன பாதிக்கப்பட்ட மனதுக்கு இலங்கையில் பிறந்தவன் என்கிற ஒரேகாரணத்தால் இந்த சங்கத்தின் இயல்புக்கு மாறாகத்தான் எழுதவும் முடிகிறது வருத்தப்படாமல் என்னால் இருக்க முடியவில்லை॥ நிலமை அப்படி நான் இழந்தவைகள் ஒருவேளை என்னை தொடர்ந்துகொண்டே இருப்பதாலோ தெரியவில்லை நான் எழுதுவதெல்லாம் இப்படியாகவே இருக்கிறது... ஆனால் இயல்பில் நான் சந்தோசம் நிறைந்தவன் சந்தோசம் வாழ்வின் பலம் என்பது நான் நாளாந்தம் பயன்படுத்துகிற வாக்கியங்களில் ஒன்று ...

சரி இனி விசயத்துக்கு வருவோம்...

1970 களில் இருந்து தமிழர்களில் இருந்த தலைமுறையில் இளைய தலை முறையினரில் பெரும்பாலானாவர்களின் வாழ்க்கை கெட்டழிந்து போய்விட்டது என்றால் யாரும் மறுக்க முடியாது...அந்த நாட்களில் 18 20 வயதிலிருந்து நடுத்தர வயது வரை இருந்த எல்லோருமே தங்கள் வாழ்வின் பாதை மாறிப்போன அல்லது॥ பாதிக்கப்பட்ட அல்லது தடைப்பட்ட அனுபவங்களை கட்டாயம் வைத்திருப்பார்கள்... அவற்றை சொல்வதற்கு அவர்களில் பெரும்பாலானாவர்கள் இன்று உயிரோடு இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விடயம் உயிரோடு இல்லை என்பது இவர்கள் ஒன்றும் இயலல்பாக இறக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது...

சரி அந்த நாட்களில் இருந்த சூழ்நிலையும் வழி நடத்தல்களும் அப்படித்தான் இருந்தத்...அதனால் பாதிக்கப்பட்டது ஆனால் அது இன்னமும் தொடர்வதில் என்ன லாபம் ஆரம்பத்தில் தமிழர்கள்தான் என்றிருந்து நிலமை மாறி ஒட்டு மொத்த இலங்கையுமே அரசியல் நரிகளால் சுபிட்சத்தை தொலைத்திருக்கிறது...

பழைய கதைகளைப்பேசிப்பேசியே அரசியலில் சுய லாபம் தேடிக்கொள்பவர்களும் இதற்கு ஏதாவது செய்ய முயன்று அநியாயமாக இறந்து போனவர்களும் தங்கள் இயல்பான நிலையுடனும் உணர்வுகளுடனும் வாழ முடியாமல் போன இலங்கையின் சபிக்கப்பட்ட மக்களுமாக இன்னமும் நடந்து கொண்டுதானிருக்கிறது இந்து துயரம்।தங்கள் இதயங்களில் எலலோரோடும் கலந்து வாழவும் சந்தோசித்திருக்கவும் ஆசையிருக்கிற இளம் சமுதாயமும் கேவலமான அரசியலாலும் யுத்தத்தினாலும் ஒருவரோடொருவர் பரஸ்பரம் மனம்விட்டு பழக முடயாத சூழலில் இருக்கிற சோகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது...

அப்பபொழுதிருந்த நிலமையில் அப்படியாகிவிட்டது இப்பொழுதும் ஏன் அதையே பேசி எங்களையும் வீணடிக்கிறீர்கள் என்கிற மனநிலைமைதான் இன்றய இளம் சந்ததியினருக்கு இருக்கிறது என்பது என் எண்ணம் இளம் சந்ததி மட்டுமல்ல எல்லோருமே ஏறக்குறைய இந்த மனோநிலையில்தான் இருக்கிறார்கள்... நாடு எப்பொழுது நல்ல நிலைக்கு வருவது நாம் எப்பொழுது நன்றாக வாழ்வது என்கிற களைப்பும் சலிப்புமானதொரு இயல்பற்ற வாழ்க்கைதான இருக்கிறது இலங்கை மக்களுக்கு...

சரி இது இப்படி என்றால் 2000ம் ஆண்டு பிறந்த குழந்தைக்கு என்ன தெரியும் 1970களிலும் 1980களிலும் நடந்ததைப்பற்றி அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் முறையான வாழ்க்கை இல்லாமல் போகும்படிக்கு ஒரு வேளை இலங்கையில் பிறந்ததுதான் அவர்கள் செய்த பாவமோ என்னவோ... இரண்டு தலை முநைகள் வீணாகி விட்டது இனியும் வேண்டாம் இந்த சோகம் நாங்கள் வாழ்வதற்கு தயாராயிருக்கிறோம் எங்களை வாழவிடுங்கள்... தயவு செய்து...அழகான தீவில் அமைதியான சூழலில் அற்புதமான வாழ்க்கை எங்களுக்கு காத்திருக்கிறது அதனை வாழவிடுங்கள்; முடிந்தவரை முன்னேறிய இலங்கையை வருகிற சந்ததிக்கு தருகிறோம்....


வருத்தப்படாத வாலிபர்களின் சங்கத்தின் போட்டிக்கு இதனை எழுதியதற்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் ஆனால் இந்த விடயம் நிச்சயமாக வருத்தப்படாதவர்கள் முலமாகத்தான் எடுத்துச்செல்லப்பட வேண்டும் என்பது என் கருத்து ச்தோசமாயிருக்கிறவர்களால் மட்டுமே அடுத்தவர்களையும் சந்தோசமாய் வைத்திருக்க முடியும்। என்ன நான் சொல்வது...
மற்றப்படி எந்த உள்நோக்கமும் கிடையாது...

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை