முடிவுக்கு வாங்கோ…




உவையள் இருக்கிறதென்னவோ இலங்கை எண்டுற அற்புதமான தீவுக்குள்ளதான் ஆனால் அதுக்குள்ளை இருக்கிற பிரச்சனைகள்தான் கொள்ளை பாருங்கோ, எதுக்கிந்த வீண் பிரச்சனைகள் எண்டாலும் கேட்பாரில்லை ம்ம்ம்…பாப்பம் உது எங்கபோய் முடியிதெண்டு ஏற்கனவே இருபத்தைஞ்சு வருசம் பின்னுக்குத்தான் இருக்கிறியள் இல்லாவிட்டால் அந்நியன் படதிதின்ரை கடைசி நேரத்தில விக்கிரம் சிறீலங்காவையும் சொல்லிக்காட்டியிருப்பாரெண்டு எங்கயோ படிச்ச ஞாபகம் அது மட்டுமில்லை இருந்த கல்வித்தரமும் வரவர குறையிறதா ஒரு கதை கவனம் உங்கடை பிரச்சனைகள் முடியிறக்கிடையில நீங்கள் முடிஞ்சுடாட்டால் சரிதான் பாத்து நடவுங்கோ கிட்டடியிலயும் அரசாங்கத்துக்கு இருநூறு கோடி ரூபா நட்டமாம் அதுவும் உங்கட காசுலதான் ஈடுகட்டவேணும் சும்மாவே பொருளாதாரம் கொடிகட்டியிருக்கு என்ன செய்யப்போறியளோ தெரியல்லை ஹ்ஹ்…ம்ம்ம்….

0 comments: